Thursday, February 28, 2019

விவாகரத்து வழக்கில் தீர்ப்பை மாற்றக்கோரி நீதிபதியிடம் வாக்குவாதம் பெண் மீது வழக்கு: குடும்ப நல நீதிமன்றத்தில் பரபரப்பு

சென்னை: தனது விவாகரத்து வழக்கில் தீர்ப்பை மாற்றம் செய்ய கோரி நீதிபதியிடம் பெண் ஒருவர் வாக்குவாதம் செய்தார். இந்த சம்பவத்தால் குடும்ப நல நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் செய்த பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான விவாகரத்து மற்றும் குடும்ப பிரச்சனைகள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்கும் குடும்ப நல நீதிமன்றங்கள் இருக்கின்றன. இதில் குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் நேற்று காலை விவாகரத்து வழக்கு ஒன்று விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான பெண் ஒருவர், ‘‘தவறான தீர்ப்பு வழங்கி விட்டீர்கள்… அதனை மாற்றி வழங்குங்கள்… என சத்தமாக நீதிபதியிடம் முறையிட்டார். இதனைக் கேட்ட நீதிபதி, ‘‘நீங்கள் உயர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்’’ என்று கூறினார். ஆனால், அந்த பெண், ‘‘நீங்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் ஏன் அங்கு செல்ல வேண்டும்,’’ என்று கேட்டார்.

மேலும், ‘‘எனக்கு நியாயம் கிடைக்காமல் நான் இங்கு இருந்து போக மாட்டேன்’’ என சொல்லி பிடிவாதமாக நீதிமன்றத்தின் உள்ளேயே நின்றிகொண்டிருந்தார். அதனால், அங்கு பரபரப்பும் பதற்றமும், ஏற்பட்டது. நீதிபதி அப்பெண்ணை வெளியே போகும் படி கேட்டுக்கொண்ட போதிலும் அந்த பெண் வெளியே போகாமல் நின்றுகொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர். அந்த பெண்ணை வெளியே அழைத்து வந்து சமாதானம் செய்தார்கள். பின்னர் நீதிமன்றம் சார்பில் அந்த பெண் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற காவல்நிலைய போலீசார், அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்கள் . பின்னர் செந்த ஜாமீனில் அந்த பெண் விடுவிக்கப்பட்டார்.

News Headline:

Lady criticized and asked the judge to change the judgement in Family Court at Madras High Court Campus

The post விவாகரத்து வழக்கில் தீர்ப்பை மாற்றக்கோரி நீதிபதியிடம் வாக்குவாதம் பெண் மீது வழக்கு: குடும்ப நல நீதிமன்றத்தில் பரபரப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2GWG0MT
via Rinitha Tamil Breaking News

அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை !

மோடியின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் பொய் பித்தலாட்டங்களை மறைக்க தேசபக்தியின் பெயரால் போர் வெறி பரப்புரை செய்கின்றனர்.

The post அர்னாப் – மாலனை பாகிஸ்தானுடன் போருக்கு அனுப்புங்கள் : சமூக ஊடகங்களில் மக்கள் கோரிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TbdNZe
via Rinitha Tamil Breaking News

Wednesday, February 27, 2019

சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம்

சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம்

சென்னை: சட்ட விரோத பேனர்வைத்ததற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி மார்ச் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுடிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அரசியல் கட்சியினர், சாதி சங்கத்தினர், சமூக அமைப்பினர் பேனர் வைக்கபதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத்தடை உத்தரவை மீறி சென்னை மற்றும் கோவை உள்பட பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பேனர்கள் பெரும்பாலும் சாலைகளின் குறுக்கேயும், நடைபாதையை மறித்துக்கொண்டும் ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசு அதிகாரிகளே அனுமதி வழங்கி உள்ளதாகவும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி குற்றச்சாட்டுகளை கூறி வந்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கு மதிக்காமல் முரணாக செயல்படுவதாக தலைமை செயலாளர், உள்துறை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், சென்னை மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர்கள் ஆகியோர்கள் மீது அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிஅரசர்கள் சத்தியநாரயணன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதிகள், விதிமுறைகளை மீறி பேனர் வைக்கப்படுவது இன்னும் தொடர்கிறது. இவ்விஷயத்தில் நீதிமன்ற உத்தரவுகளை அரசு இன்னும் முழுமையாக கடைபிடிக்கவில்லை. இவ்விவகாரத்தில் அரசு கடினமான நிலையில்தான் தான் பாடம் கற்றுக்கொள்ளும் என்று தெரிகிறது என கருத்து தெரிவித்தார்கள். மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அனுமதி பெறாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேனர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை பற்றி காஞ்சிபுரம் கலெக்டர், மாவட்ட எஸ்.பி மற்றும் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் ஆகியோர்கள் மார்ச் 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்க அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்ட்டார்கள்.

Illegal Banner issue: Madras high court has directed the Kancheepuram Municipality Commissioner, the Kancheepuram District Superintendent of Police, and the Kancheepuram district Collector to personally remain present before the High court on March 13 

The High Court bench gave contempt petition Direction against the applications filed by social activist Traffic Ramaswamy.

The post சட்ட விரோத பேனர் வழக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2GM4doM
via Rinitha Tamil Breaking News

இந்த தேசியவெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது …!

ஐந்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்காக சேவை செய்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி மாபெரும் ரஃபேல் ஊழலையும் செய்துவிட்டு போர்வெறியையும், தேசிய வெறியையும் தேர்தலுக்காகத் தூண்டுகிறார் மோடி !

The post இந்த தேசியவெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது …! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2H7lkRf
via Rinitha Tamil Breaking News

நிர்மலாதேவி பாலியல் புகார் வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்ய தடை உத்தரவு : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (மதுரை)

மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்திய புகாரில் கைதான தனியார் கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டிருக்கிறது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர் சுகந்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு பின்வருமாறு:

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, அக்கல்லூரி பயின்ற மாணவிகள் சில பேரை தவறான பாதைக்கு வழி வகுத்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இவ்வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். இவ்வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்தார்கள். தற்சமயம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவத்தில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தைச்சேர்ந்த உயர் அதிகாரிகள் பல பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. எனினும், அவர்களுடைய பெயர் மற்றும் விபரங்கள் இவ்வழக்கில் சேர்க்கப்படவில்லை. அங்குள்ள கல்லூரி மாணவிகளைத் தவறான இலக்குக்கு அழைத்ததாக உதவிப்பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடை பெற்று வரும் நிலையில், அவர் எவருக்காக மாணவிகளிடம் அப்படி பேசினார் என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை. உயரதிகாரிகள் என்று ஒரே வரியில் சுருக்கிவிடும் காவல்துறையினர் அவர்கள் யார் யார் என்று விசாரிக்கவில்லை. பல்கலைக்கழகத்தின் பதிவாளர், வேந்தர், துணைவேந்தர், உயர்கல்வித்துறையின் செயலாளர், உயர்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் எனும் பட்டியலுக்குள் வரும் இந்த நிலையில், அந்த உயரதிகாரி யார் என சொல்லவோ, அவர்களிடம் மேல் விசாரணை செய்யவோ இல்லை. சிபிசிஐடி காவல்துறையினர் கண்துடைப்பு நடவடிக்கையாக விசாரணை நடத்தி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள். ஆகவே, நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடியினரிடம் சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும். அதுவரையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் நிர்மலாதேவி வழக்கிணை விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிஅரசர்கள் என்.கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை. நிர்மலா தேவி மற்றும் அவருக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களை வைத்து விசாரணையை முடித்துள்ளார்கள். எனினும் நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவில் உயர் அதிகாரிகள் என குறிப்பிட்டுள்ளார். எனினும் சிபிசிஐடி காவல்துறை விசாரணை அதிகாரிகள் இவைகளை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கருத்தில் கொள்ளாமல், நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி உள்ளிட்ட மூன்று பேரை மட்டுமே வைத்து வழக்கை முடிவுக்கு கொண்டுவர எண்ணுகிறார்கள். ஆகவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து நீதியரசர்கள், நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. அதேசமயம், அனைத்து விசாரணையும் முடிந்த நிலையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பின் நிர்மலா தேவிக்கு ஏன் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. அவரை வெளியே விடுவதில் அரசுக்கு என்ன அச்சம் ?. அவர் மாணவிகளிடம் சொன்ன அந்த உயர் அதிகாரிகள் உயரதிகாரிகள் எவர் எவர் ?. அவர்களிடம் விசாரணை ஏதும் மேற்கொள்ளப்பட்டதா ?.

மேலும் இச்சம்பவம் சம்பந்தமான விசாரணை மேற்கொண்ட சந்தானம் குழுவின் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதி அரசர்கள், இவ்வழக்கில் சிபிசிஐடியினர் விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதால், நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்கள். அதேசமயம், மனுவுக்கு சிபிஐ, சிபிசிஐடி, நிர்மலாதேவி, கருப்பசாமி மற்றும் முருகன்ஆகியோர் பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.

Interim Stay due to Unsatisfied With CBCID Probe in Nirmala Devi case: Madras High Court(Madurai Bench)

Unhappy with CB CID probe in Nirmala Devi case, Madras High Court(Madurai Bench) issued interim stay for further Enquiry. The petitioner Conveyed that the CB-CID had deliberately not probed higher officials involved in this case and for whom Nirmala Devi was allegedly soliciting sexual activity obligations from the students.

 

The post நிர்மலாதேவி பாலியல் புகார் வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்ய தடை உத்தரவு : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (மதுரை) appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2BQw9nx
via Rinitha Tamil Breaking News

மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?

பாக் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாமை தாக்கி அழித்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 நிகழ்த்தியதாக, சங்கிகள் கொக்கரிக்கும் வேளையில் இரண்டு இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

The post மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SrgccV
via Rinitha Tamil Breaking News

விட்டுட்டு ஒரேடியா ஓடிட மாட்டான்னு நம்புறோம் – திருநங்கை அக்காவுடன் ஒரு பயணம் !

“அக்கா தப்பா எடுத்துக்காதிங்க நீங்க திருநங்கை தானே? இல்ல கல்யாணம் நகநட்டுன்னு பேசிக்கிறீங்களே எப்படி என்னன்னு…….”

The post விட்டுட்டு ஒரேடியா ஓடிட மாட்டான்னு நம்புறோம் – திருநங்கை அக்காவுடன் ஒரு பயணம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2T1pv8u
via Rinitha Tamil Breaking News

#MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ‘கண்ணியத்துக்கான பேரணி’ !

சிலர் விசைப் பலகையை அழுத்தி ஒரு இயக்கத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சிலர் அவர்களுடைய கதைகள் கேட்கப்பட வேண்டும் என விடாமுயற்சியுடன் நாடு தழுவிய அளவில் 10,000 கி.மீ. பயணிக்கிறார்கள்.

The post #MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ‘கண்ணியத்துக்கான பேரணி’ ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GOJa5g
via Rinitha Tamil Breaking News

Tuesday, February 26, 2019

கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த வீதியில்தான் தீர்வு | இராஜு உரை | காணொளி

கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் மாநாட்டில் தோழர் ராஜு ஆற்றிய உரை ! நம் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை எப்படி வேரறுக்கப் போகிறோம்? பதிலளிக்கிறார் ராஜு !

The post கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த வீதியில்தான் தீர்வு | இராஜு உரை | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EzMdvA
via Rinitha Tamil Breaking News

நீதிமன்ற வளாகத்தினுள்ளே நடந்த போலி நேர்முகத்தேர்வு : சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி

செங்கல்பட்டு 27பிப்ரவரி 2019: கீழமை நீதித்துறைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக கூறி, நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே போலி நேர்முக தேர்வு நடைபெற்ற சம்பவம் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது.

செங்கல்பட்டு, சட்டப் பணிகள் ஆணை குழு அலுவலகத்தினுள், தாலுகா அளவிலான சட்டப் பணிகள் குழுவிற்கு இளநிலை உதவியாளர்கள் வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி, போலி நேர்முகத் தேர்வுவை நடத்தியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்கள்.

இந்த ஜாமின் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. நேர்முகத்தேர்விற்க்காக 23 நபர்களை அழைத்து வந்த திண்டுக்கல்லை சார்ந்த மணி என்பவரை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிமன்ற வளாகத்தினுள்ளேயே போலி நேர்முக தேர்வு நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று நீதிபதி கூறினார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல்லை சேர்ந்த மணியை இன்னும் கைது செய்யாத போலீசாருக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

News Headline:

Madras high court Condemns Police officials for not arresting man who held fake interviews

The post நீதிமன்ற வளாகத்தினுள்ளே நடந்த போலி நேர்முகத்தேர்வு : சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2GMc1qz
via Rinitha Tamil Breaking News

பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை

இந்திய மாநிலங்களில் எங்கெல்லாம் பார்ப்பனிய ஆதிக்கம் தலை விரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அமர்த்தியா சென் கூறியவாறு பசி ஒரு வன்முறையாகவே உள்ளது.

The post பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2H4McBp
via Rinitha Tamil Breaking News

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது நபர்!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரையை சேர்ந்தவர் மனோகரன்(53). ஊசி போடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு நர்ஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார். இவர் நர்ஸ் வீட்டுக்கு சென்றபோது அங்கு அவர் இல்லை.

அங்கு நுர்ஸ்யுடைய 12 வயது மகள் தனியாக இருந்ததால் அவரிடம் பேசியுள்ளார். வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார் . இதனால் அங்கிருந்து மனோகரன் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் இதை பற்றி கூறியுள்ளார். இதையடுத்து இது சமந்தமாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடந்த சம்பவம் அடிப்படையில் மனோகரனை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்து பிறகு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

News Headline: 

53-year-old Man was arrested for sexually assaulting a minor girl at Kunnathur Located in Kanyakumari district of Tamil Nadu.

The post 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது நபர்! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2TmDLb6
via Rinitha Tamil Breaking News

கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உபயோகபடுத்த அறநிலையத்துறைக்கு தடை!

தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை உபயோகப்படுத்த அறநிலையத்துறைக்கு தடை: உயர் நீதிமன்றம்.

சென்னை: 26பிப்ரவரி2019. சென்னை ஆலந்தூரில் இருக்கும் படவேட்டம்மன் கோவிலில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் உபயோக படுத்தப்படுவதாகவும், அதனால் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளி கிழமைகளிலும், மேலும் விஷேச நாட்களிலும் அதிக சத்தத்துடன் பயன்படுத்துவதாக கோவிலுக்கு அருகே குடி இருக்கும் 75 வயது முதியவரான எம்.பீட்டர் வழக்கு தொடுத்துள்ளார்.
தன் வீட்டு ஜன்னலருகே வைக்கப்பட்டிருக்கும் 3 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படுகிறது, ஆகையால் வயதான தனக்கும், தன் மனைவிக்கும் மட்டுமின்றி, பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் தனது பேரனுக்கும் காலை முதல் இரவு வரையில் இந்த அமைதியற்ற சூழலும், அரசியல் அமைப்பு சட்ட்த்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்வுரிமையையும் பறிக்கும் வகையாக இருக்கிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு தான் அளித்த புகாரில் இணை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று அம்மனுவில் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஆகவே, கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்றி, அனுமதிக்கப்பட்ட ஒலி அளவில் பக்தி பாடல்களை இசைக்க உத்தர பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிஅரசர், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை உபயோகப்படுத்தக்கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளதால், அதன் படி ஆதம்பாக்கம் படவேட்டம்மன் கோவிலில் இருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

News Headline:

HR & CE must not use Banned Old Retro Cone Loudspeaker in Temples: Madras high Court

The post கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி உபயோகபடுத்த அறநிலையத்துறைக்கு தடை! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2IF3A2j
via Rinitha Tamil Breaking News

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை 26 பிப்ரவரி 2019: சென்னை உயர் நீதிமன்றத்தில் பழங்குடி இனத்தை சார்ந்த குணநிதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2008ம் ஆண்டில் சட்டப் படிப்பு முடித்து 2010ல் வக்கீல்களுக்கான தேசிய தகுதி தேர்விலும் தேர்ச்சி அடைந்தேன். தற்சமயம் திருச்சி சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். கடந்த 2014ல் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் 50 விரிவுரையாளர்களுக்கன பணியிடங்கள் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. பழங்குடியினர் பிரிவுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடும் அறிவிக்கப்படிருந்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 186 உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு ஆணையும் வெளியிடப்பட்டது. கடந்த மூன்று முறையும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

ஆகவே, பழங்குடியினருக்கான 1% இட ஒதுக்கீடு வழக்கப்படும் என்ற அறிவிப்பாணையின்படி சட்டப் பல்கலைகழக விரிவுரையாளர் பணி எனக்கு வழங்குமாறு உத்தரவிட பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு மார்ச் 4ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது, அதுவரையில் சட்டப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தார்.

News Headline: Appointment of assistant professor post of Dr Ambedkar law college stayed by Madras high Court

The post அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2IEb59I
via Rinitha Tamil Breaking News

நீதிமன்றத்தில் போலீஸாருடன் நடந்த மோதல் வழக்கில் வழக்கறிஞர்கள் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை

கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பல வழக்கறிஞர்களும், காவல் துறையினரும் படுகாயம் அடைந்தார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் மீது விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மோதல் சம்பவம் தொடர்பாக, வழக்கறிஞர்களுக்கு எதிராகவும், காவல் துறையினருக்கு ஆதரவாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கறிஞர்களுக்கு எதிரான இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 31 வழக்கறிஞர்களும் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், வழக்கறிஞர்களுக்கு எதிராக பாரபட்சமான முறையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இடைக்கால குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டியும், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டியும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் மகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது, அதில் மோதல் சம்பவம் தொடர்பாக ஐந்து காவல் துறையினர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வழக்கில் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சாட்டி வாதிட்டார்.
இவ்வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கறிஞர்களுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் சிபிஐ பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

The post நீதிமன்றத்தில் போலீஸாருடன் நடந்த மோதல் வழக்கில் வழக்கறிஞர்கள் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2GMRwKv
via Rinitha Tamil Breaking News

அரசு ஊதியத்தைத் திருப்பித் தர வேண்டும்! – முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஊதியத்தைத் திருப்பித் தர வேண்டும்! – முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு!
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வேல்துரை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என நிரூபணம் ஆனதால், வேல்துரை தானே முன்வந்து பெற்ற ஊதியத்தை திரும்பி அளித்திருக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். ஊதியமாக பெற்ற 21.58 லட்சம் ரூபாயை நான்கு வாரங்களில் அரசுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுடிருக்கிறது.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், வேல்துரை.
அரசு ஒப்பந்ததாரராக இருந்து கொண்டே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரியும், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு ஒப்பந்ததாரராக இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்டதால், வேல்துரை வெற்றி செல்லாதது என தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக வேல்துரை பெற்ற ஊதியம் 21லட்சத்து 58 ஆயிரம் ரூபாயையும், 201 நாள் சட்டமன்ற பணியில் பங்கேற்றதற்கு, ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதித்தும் சட்டமன்ற செயலாளர் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை எதிர்த்து வேல்துரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பார்த்திபன் விசாரித்தார். விசாரணையின் போது, அரசு ஊழியர் ஏதேனும் குற்றம் புரிந்து பணியிலிருந்து நீக்கப்பட்டால், அதுவரை அவர் பெற்ற சம்பளம் திரும்பி பெறப்பட மாட்டாது.

அதேபோல், அரசு ஊழியர் என்ற அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தன்னிடம் ஊதியத்தை திருப்பி செலுத்தக் கோர முடியாது என வேல்துரை தரப்பில் வாதிடப்பட்டது.

எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதால், எம்.எல்.ஏ. என்ற அந்தஸ்தை இழந்துவிட்ட மனுதாரர், ஐந்து ஆண்டுகள் பெற்ற ஊதியத்தை திருப்பி செலுத்த வேண்டும் என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், அரசு ஊழியர்களுடன், மனுதாரர் தன்னை ஒப்பிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வாழ்வாதாரத்துக்காக சம்பளம் வாங்குகின்ற அரசு ஊழியரையும், மக்களுக்கு சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வையும் ஒரே மாதிரியாக கருத முடியாது என தெளிவுபடுத்தினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வேல்துரை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதே செல்லாது என நிரூபிக்கப்பட்டு விட்டதால், வேல்துரை தானாக முன்வந்து ஊதியத்தை திரும்பி அளித்திருக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, நான்கு வாரங்களில் ஊதிய தொகை 21.58 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post அரசு ஊதியத்தைத் திருப்பித் தர வேண்டும்! – முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவு! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2NuY4Op
via Rinitha Tamil Breaking News

லஞ்சம் வாங்கினால் ‘தூக்கு தண்டனை’ கொடுக்க வேண்டும் ; உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: ‘அரசாங்க சம்பளம் பெற்று, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது தேசத்துரோக வழக்கு தொடுத்து, துாக்கில் போட வேண்டும். மேலும் அவர்களுடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்’ என்று, உயர்நீதிமன்ற, மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது.
மதுரை, சூர்யா நகர் பரணிபாரதி தாக்கல் செய்துள்ள பொதுநல மனு பின்வருமாறு:

தமிழக மின் வாரியத்தில், 325 உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களுக்கு, 2018 டிச., 30ல் எழுத்து தேர்வு நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலை, தேர்வு நடத்தியது. வினாத்தாள் வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அண்ணா பல்கலை விசாரணை நடத்தியது.
பின், அரசின் இணையதளத்தில் வினாத்தாள், கீ பதில்களுடன் தேர்வு முடிவுகள் வெளியாகின. 1,575 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன.

வினாத்தாள் வெளியானது பற்றி, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். தேர்வு மற்றும் நியமன நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.

நீதிபதி கிருபாகரன்: தேர்வு முடிந்து, வினா மற்றும் விடைத்தாள்களை திரும்பப் பெற்றுக் கொள்கின்றார்கள். இந்நிலையில், எப்படி வினாத்தாள் வெளியானது? 120 வினாக்களை நினைவு வைத்து, ஒருவராக எழுதி வெளியிட முடியாது.

இந்த முறைகேட்டிற்கு, அண்ணா பல்கலையைச் சேர்ந்த, ஏதாவது ஒரு ஊழியர் உடந்தையாக இருந்திருக்கலாம். அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு, சிலர் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றார்கள். லஞ்சம் அனைத்துத் துறைகளிலும் இருக்கிறது.

அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு, லஞ்சம் பெரும் அலுவலர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து. துாக்கில் போட வேண்டும். மேலும் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். இதனால், லஞ்சம் குறையும் என கூறினார்.

மேலும், நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் தேர்வு நியமன நடைமுறைகள் சம்பந்தப்பட்ட, எந்தவித மேல்நடவடிக்கையும் அரசு மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. விசாரணை, மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

The post லஞ்சம் வாங்கினால் ‘தூக்கு தண்டனை’ கொடுக்க வேண்டும் ; உயர் நீதிமன்றம் அதிருப்தி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2BUEPsX
via Rinitha Tamil Breaking News

சட்டவிரோதமாக கைது செய்யும் நடவடிக்கை: மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சட்டவிரோதமாக கைது செய்யும் விவகாரம்: மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுககு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! மாணவர் இக்குற்றத்தில் ஈடுபட்டார்களா என விசாரிக்காமல், சட்டவிதிகளை மீறி காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

மேலும் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் மாஜிஸ்திரேட்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட தயங்காது என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

செம்மரக் கடத்தல் வழக்கில் கடந்த 22-ம் தேதி கைது செய்யப்பட்ட மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரரான பொறியியல் மாணவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்ததற்காக, மனுதாரர் கைது செய்யப்பட்டதாக, மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்டு மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ’மாணவர் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என விசாரிக்காமல், சட்டவிதிகளை மீறி காவல் துறையினர் கைது செய்திருக்கிறது தெரிகிறது. மாணவரின் கைது அவருக்கு மட்டுமின்றி, குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.
மேலும், சட்டவிரோத கைது எனப்படுவது மிக மோசமான தனிநபர் உரிமை மீறல். கைது செய்யும் போது உரிய விதிகளை பின்பற்றும்படி, காவல் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போதும், விதிகளை மீறி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகச்சுட்டிக்காட்டினார்.
இதுபோல சட்டவிரோத கைதுகளை மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டவர்களை இயந்திரத்தனமாக சிறையிலடைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்களுக்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட இந்த நீதிமன்றம் தயங்காது எனவும் நீதிபதி மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post சட்டவிரோதமாக கைது செய்யும் நடவடிக்கை: மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2tBGXRZ
via Rinitha Tamil Breaking News

விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க எதிர்ப்பு: நகராட்சி அலுவலகம் முற்றுகை

கொடைக்கானல்: உயர்நீதிமன்ற உத்தரவின்ப்படி கொடைக்கானலில் விதிமீறி கட்டிய கட்டடங்களுக்கு ‘சீல்’ வைத்து முடக்கும் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 1993 ‘மாஸ்டர் பிளான்’ கட்டுமான வரைமுறைமீறி கட்டப்பட்ட கட்டடங்களை மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி கடந்த மாதம் நகராட்சி நிர்வாகத்தினர் 43 கட்டடங்களுக்கு ‘சீல்’ செய்து, மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் விதிமீறலுக்குட்பட்ட கட்டடங்களின் அறிக்கை நகராட்சியிடம் கோரப்பட்டது. இதில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் 1,415, அவற்றை சீல் வைத்து மார்ச் 11 ம் தேதி அறிக்கையளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நேற்று காலை நகராட்சி கமிஷனர் முருகேசன் தலைமையில் நகரமைப்பு அலுவலர்கள் அடங்கிய ஐந்து குழுவினர், மின்வாரிய அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க ஆயத்தமாயினர்.தகவலறிந்த வணிகர் சங்கம் மற்றும் பொதுநலச்சங்கம், பாதிக்கப்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கமிஷனரிடம், ”சீல் வைப்பது குறித்து நோட்டீஸ் வழங்கவில்லை. சீல் வைக்கும் கட்டடங்கள் குறித்து வெள்ளையறிக்கை அளிக்க வேண்டும். விதிமீறலிலுள்ள அரசு கட்டடங்களை சீல் வைத்து விட்டு பொதுமக்கள் மீது நடவடிக்கையை தொடங்குங்கள்,” என வாக்குவாதம் செய்தனர்.கமிஷனர் முருகேசன் கூறுகையில் ” பொதுமக்கள் தொடுத்த வழக்கே தற்போது நடவடிக்கையாக மாறியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் பொறுப்பு எனக்கு உள்ளது. வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற கருத்து கேட்கப்பட்டு, உங்களது கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும், எனினும் நீதிமன்றம் உத்தரவுப்படியே எங்கள் நடவடிக்கை இருக்கும்” என கமிஷனர் முருகேசன் பதிலளித்தார்.பாதிக்கப்பட்டோர் கூறுகையில்,’ சீல் வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி அவகாசம் அளிக்க வேண்டும். மீறி சீல் வைக்கும் நடவடிக்கையை தொடங்கினால் போராட்டங்கள் நடத்துவோம், என்றனர்.கமிஷனர் அறிவிப்பு இதற்கிடையே நேற்று மாலை நகராட்சி கமிஷனர் முருகேசன் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி தற்போது குடியிருப்பு, அரசு கட்டிடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து 300 வணிக நிறுவன கட்டடங்களுக்கு பாரபட்சமின்றி பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கும், என்று கூறினார்.

The post விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க எதிர்ப்பு: நகராட்சி அலுவலகம் முற்றுகை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2tFPJOO
via Rinitha Tamil Breaking News

போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் !

“இரத்தம் நம்முடையதாயிருந்தாலும், அவர்களுடையதாயிருந்தாலும், அது மனித இனத்தின் இரத்தம்”

The post போர் ஆயுதத் தரகர்களுக்கானது ! புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டிக்கும் பாகிஸ்தான் இளைஞர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ExoBYB
via Rinitha Tamil Breaking News

துப்புரவுப் பணியாளர்கள் : நாடகமாடும் மோடி ! NSA-வைக் காட்டி மிரட்டும் போலீசு !

கும்பமேளாவில் தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி நாடகமாடுகிறார் மோடி. ஊதியமும் உபகரணங்களும் தராமல் “எங்களுடைய கால்களை கழுவதால் எங்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?” என கேட்கின்றனர் தொழிலாளர்கள்.

The post துப்புரவுப் பணியாளர்கள் : நாடகமாடும் மோடி ! NSA-வைக் காட்டி மிரட்டும் போலீசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ViduYY
via Rinitha Tamil Breaking News

மக்கள் அதிகாரம் மாநாடு மாஸ் ! | மாநாட்டில் பங்கேற்றவர்களின் முகநூல் பதிவுகள் !

‘எதிர்த்து நில்’ மாநாட்டில் கலந்துகொண்ட சிலர் முகநூலில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதனுடைய தொகுப்பு இங்கே...

The post மக்கள் அதிகாரம் மாநாடு மாஸ் ! | மாநாட்டில் பங்கேற்றவர்களின் முகநூல் பதிவுகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2H2MOrl
via Rinitha Tamil Breaking News

Monday, February 25, 2019

ஒன்னு சாப்பிட்டதும்… அடுத்ததுன்னு மனசு கேட்கும் | சாட் உணவு சுவைஞர்கள் | புகைப்படக் கட்டுரை

அதிரசம், தேன்குழல், உப்பு உருண்டைனு எங்கள சுத்தி நின்னு இதுமாதிரி நீங்க வித்தா சாப்பிட போறோம். அதுக்கு வழியில்ல. அப்போ, எது சீப்பா கெடைக்குதோ அதத்தானே நாங்க சாப்பிட முடியும்.

The post ஒன்னு சாப்பிட்டதும்… அடுத்ததுன்னு மனசு கேட்கும் | சாட் உணவு சுவைஞர்கள் | புகைப்படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NuTVtJ
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : கடலடியில் தமிழர் நாகரிகம் !

தமிழர்களின் நாகரீக தொன்மம் குறித்து அறிய பூம்புகார், கொற்கை, மாமல்லபுரம் என கடற்பரப்பிலும், ஆதிச்ச நல்லூர், அருகண் மேடு, கீழடி என நீரிலும் நிலத்திலும் தேட வேண்டியவை இன்னமும் உள்ளது.

The post நூல் அறிமுகம் : கடலடியில் தமிழர் நாகரிகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TfKGTt
via Rinitha Tamil Breaking News

உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்

மென்மையான பாதங்களை நிதானமாக, எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து, வெண்பனியில் புதைந்து அசையாது கிடந்த மனித உருவத்தை நோக்கி நடந்தது கரடி... | பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் முதல் பாகம் அத்தியாயம் 1...

The post உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2VimBZS
via Rinitha Tamil Breaking News

வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் !

எந்த சாஸ்திரங்கள் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படித்தால் தீட்டு என சொன்னதோ அதே ‘பாரம்பரியத்தை’ மீண்டும் கொண்டுவரப் பார்க்கிறது இந்துத்துவ அரசு.

The post வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NrjT1i
via Rinitha Tamil Breaking News

விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் – பாகம் 2

விளையாடும் குழந்தைகள் என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு... பாகம் 2.

The post விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் – பாகம் 2 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2tEJPgE
via Rinitha Tamil Breaking News

Sunday, February 24, 2019

இன்னொரு முறை மோடி வந்தா நாட்டை விட்டு ஓடுறதுதான் ஒரே வழி ! அண்ணா பல்கலை மாணவர்கள்

ஸ்டூடன்ஸா இருக்கும்போதே அரசியலுக்கு வந்தா இழப்பு வரும்னு சொல்றாங்க… உண்மையிலேயே இழப்பு நமக்கில்ல, அரசியல்வாதிக்குத்தான்.. அது இப்பத்தான் புரியுது…

The post இன்னொரு முறை மோடி வந்தா நாட்டை விட்டு ஓடுறதுதான் ஒரே வழி ! அண்ணா பல்கலை மாணவர்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Xm6egI
via Rinitha Tamil Breaking News

தொழுநோய் ஒழிப்பில் பின் தங்கிய இந்தியா !

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலக அளவிலான தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சம் என்றும், அதில் பாதிக்கும் மேலானோர் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது.

The post தொழுநோய் ஒழிப்பில் பின் தங்கிய இந்தியா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BRBx9Y
via Rinitha Tamil Breaking News

Saturday, February 23, 2019

கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் திருச்சி மாநாடு | live streaming | நேரலை

அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் - காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! - மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு ! நேரலை!

The post கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் திருச்சி மாநாடு | live streaming | நேரலை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Vf3ekg
via Rinitha Tamil Breaking News

Friday, February 22, 2019

தோட்டாக்களுடன் விமானத்தில் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைது

டெல்லி:டெல்லி விமான நிலையத்தில் தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதிக்க ஆவணங்கள் எதாவது இருக்கிறதா என விசாரித்தனர் . எதையும் அளிக்காததால் அவரை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.டெல்லி விமான நிலையத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. மொத்தம் பத்து தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முயன்றார்.

பீகார் மாநிலத்தில் உள்ள மதேபுரா தொகுதியின் எம்.எல்.ஏ. சந்திர சேகர் ஆவார் . அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்த்தவர். இவர் பிப்ரவரி 20ஆம் தேதி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் பையில் 10 தோட்டாக்கள் இருப்பதை விமான நிலைய சோதனையில் கண்டு பிடித்தனர் . அந்த தோட்டாக்கள் அனைத்தும் 3.15 போர் ரகம் என்று தெரியவந்தது . இதனால் அவர் விமானத்தில் பயணிப்பதை அதிகாரிகள் தடுத்தனர் . தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதி ஆவணங்கள் இருக்கிறதா என விசாரித்தனர் . ஏன் எடுத்து சென்றார் என்று தெரியவில்லை.

The post தோட்டாக்களுடன் விமானத்தில் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2TXAEUe
via Rinitha Tamil Breaking News

நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்

இவ்ளோ கழிப்பறை இருக்கு. அதுக்கான பக்கெட் போதுமானது இல்லை. வர சாமியாருங்க தூக்கிட்டு போயிடுறாங்க. அத நாங்க கழுவுறோம். மனரீதியாக எங்களுக்கு துன்பமாக இருக்கிறது... குமுறும் தூய்மைப் பணியாளர்கள்.

The post நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SUtHXG
via Rinitha Tamil Breaking News

ராஜஸ்தான் சிறையில் பாகிஸ்தானியர் அடித்துக் கொலை : மனித உரிமை ஆணையம் கண்டனம்

மோடி ஆட்சிக்கு வந்தபின், கும்பல் வன்முறை ஒரு தொற்று நோயாக நாட்டின் மூளை முடுக்கெல்லாம் பரவியுள்ளது. மோடி ஆட்சி தொடருமானால், காரணமே இல்லாமல்கூட மக்கள் அடித்து கொல்லப்படக்கூடும்.

The post ராஜஸ்தான் சிறையில் பாகிஸ்தானியர் அடித்துக் கொலை : மனித உரிமை ஆணையம் கண்டனம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2E2KkGr
via Rinitha Tamil Breaking News

லலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை !

வேலை முடித்து வீட்டுக்கு செல்பவர்கள் 10, 20 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு 30 ரூபாய்க்கு வீட்டுக்கு குழந்தைகளுக்கு வாங்கி செல்வார்கள். ஐம்பது ரூபாய் வைத்தால் குடும்பத்தினரின் பலகார ஆசை தீர்ந்து போகும்.

The post லலிதா இனிப்பகம் : சென்னையில் ஒரு மக்கள் கடை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ItZVEj
via Rinitha Tamil Breaking News

புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி !

கொடூரமான தாக்குதல் நடந்த நான்கு மணி நேரத்துக்கு பிறகு எந்தவித பதட்டமும் இல்லாமல் தன் பிம்பத்தை கட்டமைக்க படப்பிடிப்பு நடத்திக் கொண்டும், நொறுக்கு தீனி உண்டுகொண்டும் இருந்துள்ளார் மோடி.

The post புல்வாமா தாக்குதல் அதிர்ச்சிகளை ஏற்படுத்திய நேரத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த மோடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2T4POdj
via Rinitha Tamil Breaking News

பிப்ரவரி 23 : கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் ! | மக்கள் அதிகாரம் மாநாடு | அனைவரும் வருக !

மக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாக்கவே போராடுகின்றனர். போராடும் மக்களை வெறி கொண்டு ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த ”எதிர்த்து நில் !” மக்கள் அதிகாரம் மாநாடு ! அனைவரும் வாரீர்

The post பிப்ரவரி 23 : கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் ! | மக்கள் அதிகாரம் மாநாடு | அனைவரும் வருக ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2EoKA3J
via Rinitha Tamil Breaking News

Thursday, February 21, 2019

அம்பானியின் கையில் இந்திய ஊடகத் துறை !

கார்ப்பரேட்டுகளின் கறி விருந்தை கார்ப்பரேட் ஊடகங்களால் கனவிலும் கேள்வி கேட்க முடியாது... இந்திய ஊடகங்களின் பிடி அம்பானியிடம் சிக்கியிருப்பதை அம்பலப்படுத்தும் அல்ஜசீராவின் வீடியோ

The post அம்பானியின் கையில் இந்திய ஊடகத் துறை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IsKpIT
via Rinitha Tamil Breaking News

சங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி !

ஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்ததாகவே இருக்கிறது...

The post சங்கிகளால் பத்திரிகையாளர் சுவாதிக்கு தொடரும் மிரட்டல்கள் – ஐநா அதிருப்தி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2BNLWDz
via Rinitha Tamil Breaking News

கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி !

கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ குண்டர்கள் முசுலீம்கள், தலித்துகள், பழங்குடிகள் மீது பசு பாதுகாவலர் பெயரில் 123 வன்முறைகளை நிகழ்த்தியுள்ளனர்.

The post கோமாதா குண்டர்களால் இறைச்சி – தோல் ஏற்றுமதி கடும் சரிவு ! ஊரகப் பொருளாதாரம் வீழ்ச்சி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2U1R5z0
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி ?

வெறுமனே, பெரியார் பிறந்த மண் என்று பெருமை பட்டுக்கொள்வதும்; Go Back Modi என்பதை தேசிய அளவில் டிரெண்டிங் செய்வது என்பதையும் தாண்டி... ஆர்.எஸ்.எஸ். கும்பலை எதிர்த்து முறியடிக்க நாம் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்நூல்.

The post நூல் அறிமுகம் : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GAoxta
via Rinitha Tamil Breaking News

130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு ! மோடி கலர்கலரா ரூபா நோட்டடிச்சா போதுமா ?

பல ஆயிரம் கோடி, கடன் கொடுத்து முதலாளிகளை அனுப்பிடுறாங்க. விவசாயிகள் உதவி கேட்டா, நிர்வாணமா அலையவுடுறானுங்க...அரசு விடுதி மாணவர்கள் நேர்காணல்!

The post 130 ரூபாய் பஸ் பாஸ் இப்போ 300 ரூபா ஆயிருச்சு ! மோடி கலர்கலரா ரூபா நோட்டடிச்சா போதுமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NlJ05E
via Rinitha Tamil Breaking News

அரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது!


வேலூர் :அரக்கோணம் அடுத்து உள்ள களத்தூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாஸ்கர் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த உள்ள களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (வயது 35) அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த காரணமாக சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுமியிடம் கேட்டு உறுதியும் செய்தனர்.இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் களத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த தகவலை பற்றி செய்தியாளர்கள் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று கூறி மறைக்க முயற்சி மேற்க்கொண்டனர். செய்தி வெளியிடாமல் இருக்க காரணம் என்ன ?என பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு குழப்பத்தில் உள்ளனர் .

The post அரக்கோணம் அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் கைது! appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2XhDBRQ
via Rinitha Tamil Breaking News

ரபேல் ஒப்பந்த முறைகேடு வழக்கை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் !

எல்லா வகையிலும் ஓட்டையை அடைக்கப் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் ஓட்டைகள் விழுந்தபடியே இருக்கின்றன. மோடியின் ரபேல் ஊழல் வெளியே வழிந்தோடிக்கொண்டே இருக்கிறது.

The post ரபேல் ஒப்பந்த முறைகேடு வழக்கை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2DYk3Jb
via Rinitha Tamil Breaking News

ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து

ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு… நாங்க அந்த விபத்துலேருந்து மயிரிழையில தப்பிச்சிட்டோம்... இன்னொரு தடவ மோடி வந்தா நாங்க குடும்பத்தோட சாகனும் வேற வழியில்ல….

The post ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2T5iym9
via Rinitha Tamil Breaking News

5 -ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு – இதுதான் தரமா !

ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களும் நூற்றுக்கு நூறு வாங்கினால் உடனே அது தரமற்ற தேர்வு என்கிறார்கள். சரி அப்படியென்றால் இவர்களின் வரையறைப்படி தரம் என்பதுதான் என்ன?

The post 5 -ம் வகுப்புக்கே பொதுத்தேர்வு – இதுதான் தரமா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GBVwxp
via Rinitha Tamil Breaking News

வாடகை கார்களுக்கு பதில் இனி தானியங்கி கார்கள்

கார் உற்பத்தியின் சரிவு ஆலைகளின் கதவடைப்பு, தொழிலாளர்களின் வேலை இழப்பு தொடங்கி உதிரி பாகங்களைத் தயாரித்து சப்ளை செய்யும் சிறு குறு நிறுவனங்களையும் பாதிக்கவுள்ளது.

The post வாடகை கார்களுக்கு பதில் இனி தானியங்கி கார்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GUVDTT
via Rinitha Tamil Breaking News

Wednesday, February 20, 2019

ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

”...ஒருமுறை ரேஷன் அட்டை கேட்டதற்கு அவர்கள் (அலுவலர்கள்) எங்களை நரேந்திர மோடியைப் பார்த்து பார்த்து மனு செய்யுமாறு கூறினர்” என்று நினைவுகூர்கிறார் பாக்யா.

The post ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2E248cG
via Rinitha Tamil Breaking News

கோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் ! பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி

படுகொலைகளை அவர்களே ஒப்புக் கொண்டாலும் ஜனநாயகத்தில் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி படுகொலையாளர்கள் சுதந்திரமாக உலவ முடிகிறது.

The post கோத்ரா ரயிலை எரித்தது நாங்கள்தான் ! பெண் சாமியாரின் ஒப்புதல் வாக்குமூலம் | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ek1GQb
via Rinitha Tamil Breaking News

மொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்

செத்துப்போவதை விடவும் பிணங்களாய் வாழ்வது பெரிய கொடுமை ! - துரை சண்முகம் கவிதை

The post மொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2VacRk9
via Rinitha Tamil Breaking News

இந்திய உணவு கிடங்குகளில் வீணாகும் தானியங்கள்

மழை, வெயில் மற்றும் வெள்ளத்தால் அழுகியோ அல்லது பூச்சிகளாலும் எலிகளாலும் உட்கொள்ளப்பட்டோ ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டன்கள் தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன.

The post இந்திய உணவு கிடங்குகளில் வீணாகும் தானியங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2U1ntlo
via Rinitha Tamil Breaking News

எதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர் கைது

போலீசின் பொய்வழக்கு, காவி கும்பலின் மிரட்டல்களையெல்லாம் எதிர்கொண்டு, மக்கள் ஆதரவோடு மாநாட்டு வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

The post எதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர் கைது appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Xe4GVP
via Rinitha Tamil Breaking News

புல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது ?

ஒரு புறத்தில் தேசபக்தி என்ற பெயரில் வெறியைக் கிளப்பிவிட்டுக் கொண்டே மறுபுறத்தில் இந்திய இராணுவத்தினரின் கழுத்தை அறுக்கும் மோடி அரசின் உண்மை முகத்தைப் படியுங்கள் !

The post புல்வாமா பதிலடி : இன்னும் எத்தனை வீரர்களை இவர்களின் அரசியலுக்காக இழப்பது ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TZqNxd
via Rinitha Tamil Breaking News

சித்துவின் கேள்வி : மசூத் அன்சாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த ‘தேச பக்தர்கள்’ யார் ?

புல்வாமா தாக்குதல்கள் குறித்து சித்து தெரிவித்த யதார்த்தமான கருத்துக்களுக்காக சங்க பரிவாரக் கும்பல் மட்டுமல்ல காங்கிரசு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் சித்துவைக் கண்டித்திருக்கின்றன.

The post சித்துவின் கேள்வி : மசூத் அன்சாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த ‘தேச பக்தர்கள்’ யார் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2T2VfcB
via Rinitha Tamil Breaking News

எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி ரூ 453 கோடி செலுத்த வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஒன்றிரண்டு மாதங்கள் வாங்கிய கடனுக்கு வட்டிகட்டாத ஏழை விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் அதே அமைப்பு, பல ஆயிரம் கோடியை கட்டத்தவறிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கரிசனத்துடன் தீர்ப்பு எழுதியிருக்கிறது

The post எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி ரூ 453 கோடி செலுத்த வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IoGc91
via Rinitha Tamil Breaking News

காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் காவிகள் !

தெருவில் திரியும் காவிப்படைகள் முதல் கவர்னர் பதவியில் அமர்ந்திருக்கும் காவிகள் வரை காஷ்மீர் மக்களை இந்தியர்களாகவே கருதவில்லை என தெளிவாக தெரிகிறது.

The post காஷ்மீரி மருத்துவரை பாகிஸ்தானுக்கு போகச் சொல்லும் காவிகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GyFKDj
via Rinitha Tamil Breaking News

தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் ! பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை !

அனைவரும் குரல் எழுப்புவோம்! முகிலனை விடுதலை செய் என்று! அனைவரும் பரப்புவோம் முகிலன் வெளியிட்ட ஸ்டெர்லைட் - காவல்துறை சதி வீடியோவை !

The post தோழர் முகிலனை விடுதலை செய் என முழங்குவோம் ! பரப்புவோம் அவர் வெளியிட்ட காணொளியை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Nhqc7o
via Rinitha Tamil Breaking News

Tuesday, February 19, 2019

குழந்தைகள் வாழ்க ! ஆரம்பப் பள்ளி கல்வி குறித்த புதிய தொடர்

ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தருதல் எனும் ஒரு மிக முக்கிய, கடினமான பிரச்சினைக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் முதல் பகுதி...

The post குழந்தைகள் வாழ்க ! ஆரம்பப் பள்ளி கல்வி குறித்த புதிய தொடர் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2twUaLU
via Rinitha Tamil Breaking News

ஆ.இரா.வேங்கடாசலபதி இல்லையென்றால் திராவிட இயக்கம் என்னவாகியிருக்கும் ?

ஆ.இரா.வெங்கடாசலபதியின் பங்களிப்பிற்காக காலச்சுவடு நடத்திய கருத்தரங்கில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா பேசிய கருத்தின் மீது அதிஷாவின் விமர்சனம்.

The post ஆ.இரா.வேங்கடாசலபதி இல்லையென்றால் திராவிட இயக்கம் என்னவாகியிருக்கும் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GSCRws
via Rinitha Tamil Breaking News

பொருளாதார அறிஞர்களின் நகரம் இலண்டன் : பொருளாதாரம் கற்போம் – 11

பண்டங்கள், பணம், லாபம், மூலதனம்.... இவற்றுக்கிடையே இருக்கும் காரண காரியத் தொடர்பைக் கண்டுபிடிப்பதற்கு தாமஸ் மான் முயற்சி செய்தார். அனிக்கினின் தொடர், அவசியம் படியுங்கள்.

The post பொருளாதார அறிஞர்களின் நகரம் இலண்டன் : பொருளாதாரம் கற்போம் – 11 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IqtkiR
via Rinitha Tamil Breaking News

மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !

மோடி தலைமையிலான ஆட்சியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நமது உணவு முதல் அந்தரங்கம் வரை அனைத்திலும் இந்துத்துவக் கும்பல் தலையிட்டு வருகிறது

The post மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2IoQC8E
via Rinitha Tamil Breaking News

தூய்மை இந்தியா : 4000 கோடி ரூபாயை அபேஸ் செய்த மோடி அரசு | காணொளி

தலைமை தணிக்கையாளரின் அறிக்கையின் படி வசூலிக்கப்பட்ட ரூ. 16,401 கோடியில் 4,000 கோடி ரூபாயின் கதி என்னவென்று தெரியவில்லை.

The post தூய்மை இந்தியா : 4000 கோடி ரூபாயை அபேஸ் செய்த மோடி அரசு | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2T1N14x
via Rinitha Tamil Breaking News

ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள் | மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் | காணொளி

“ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் ஆற்றிய உரையின் காணொளி !

The post ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள் | மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் | காணொளி appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2tt5QPu
via Rinitha Tamil Breaking News

வெனிசுலா குறித்து தி இந்துவில் ஒரு அபத்தக் கட்டுரை | கலையரசன்

அரசியல் பிரச்சார நோக்கில் எழுதப்படும் இது போன்ற கட்டுரைகள் எந்த லாஜிக்கும் இல்லாமல், புனைவுகளையும், அரைவாசி உண்மைகளையும் கலந்து எழுதப் படுகின்றன.

The post வெனிசுலா குறித்து தி இந்துவில் ஒரு அபத்தக் கட்டுரை | கலையரசன் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GAn4mA
via Rinitha Tamil Breaking News

இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு !

சமூக ஊடக காவி ட்ரோல்கள் ஆளும் நாட்டில் மாற்றுக்குரல் எழுப்புவோர் தூக்கி அடிக்கப்படுவார்கள் என்பதைத்தான் கடந்த ஐந்தாண்டுகாலமும் இந்தியா அனுபவித்து வருகிறது.

The post இராணுவத்தின் அத்துமீறலைக் கூறிய பேராசிரியர் பணிநீக்கம் – போலீசு வழக்கு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SbVsWd
via Rinitha Tamil Breaking News

சர்வம் தாளமயம் : மயிலை லஸ்கார்னரிலிருந்து காசிமேட்டின் கஷ்டங்களைப் பேசுகிறது !

நந்தனார் கதையை நவீன வடிவில் மீளுருவாக்கம் செய்கிற முயற்சியாகவே சர்வம் தாள மயம் படத்தை புரிந்துகொள்ள முடிகிறது. - அதிஷாவின் திரை விமர்சனம்.

The post சர்வம் தாளமயம் : மயிலை லஸ்கார்னரிலிருந்து காசிமேட்டின் கஷ்டங்களைப் பேசுகிறது ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2XcN7Fx
via Rinitha Tamil Breaking News

Monday, February 18, 2019

கழிவுகளை மனிதனே அகற்றுகையில் ஏற்படும் மரணத்தில் தமிழகம் முதலிடம் !

கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் மட்டும் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துகையில் 144 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

The post கழிவுகளை மனிதனே அகற்றுகையில் ஏற்படும் மரணத்தில் தமிழகம் முதலிடம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2T52iRW
via Rinitha Tamil Breaking News

மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா ?

இந்த அக்ஷய பாத்ரா அமைப்பு உணவில் பூண்டு, வெங்காயம் இல்லாமல் உணவை பரிந்துரை செய்யும் ஒரு அமைப்பு. சத்துணவு வழங்க இந்த அமைப்பை அனுமதிக்கலாமா?

The post மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கலாமா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2ImYGa2
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : ஆட்சியில் இந்துத்துவம்

மிதவாதி வாஜ்பாயி ஆட்சிகாலத்திலேயே பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமது பாசிசக் கருத்துக்களை விதைப்பதற்கு எந்த அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களின் வழியே எடுத்துரைக்கிறார், நூலாசிரியர்.

The post நூல் அறிமுகம் : ஆட்சியில் இந்துத்துவம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2BIzqVN
via Rinitha Tamil Breaking News

விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் !

விளையாடும் குழந்தைகள் என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு.

The post விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2TVrzeK
via Rinitha Tamil Breaking News

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி : பேராசிரியர்கள் ஆய்வகங்கள் கோரி மாணவர்கள் போராட்டம் !

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி என்றில்லை; தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் அனைத்திலும் இதுதான் நிலைமை

The post கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி : பேராசிரியர்கள் ஆய்வகங்கள் கோரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SbmBIX
via Rinitha Tamil Breaking News

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !

புல்மாவாவில் தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் பலியான நிலையில், அதைத் வைத்து எந்தெந்த வழிகளில் ‘பிழை’ப்பை நடத்தலாம் என இந்துத்துவ கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது. காஷ்மீர் மாணவர்கள் மீது நாடெங்கிலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல், சமூக ஊடகங்களில் முசுலீம்களுக்கு எதிராக விசம பிரச்சாரம் என இந்துத்துவ கும்பல் தேர்தல் நெருங்குவதையொட்டி வெறியாட்டம் போடுகிறது. வெறுப்பைத் தூண்டி கலவரங்களை நிகழ்த்த காத்திருக்கும் இந்துத்துவ கும்பல் தலைவர்கள் விசத்தை கக்கத் தொடங்கியுள்ளனர். விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த சாமியார் […]

The post கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2S681m4
via Rinitha Tamil Breaking News

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன? | கருத்துக் கணிப்பு !

இதர பாஜக அல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கவர்னர் மூலம் நெருக்கடி கொடுப்பதை மோடி அரசு செய்து வருகிறது. தற்போது இதனை எதிர்த்து பாண்டிச்சேரி முதல்வர் நாராயண சாமி நடத்தும் கலகத்தைப் பற்றி என்ன கருதுகிறிர்கள் ! வாக்களியுங்கள்.

The post புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன? | கருத்துக் கணிப்பு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2X6H7OE
via Rinitha Tamil Breaking News

இலங்கை புத்தளம் : சிங்கப்பூரின் குப்பை மேடா ?

இந்தியாவைப் போன்று இலங்கையின் புத்தளம் பகுதியையும் ஏகாதிபத்தியங்களின் குப்பை மேடாக்க முயற்சித்து வருகிறது அந்நாட்டு அரசு. இது புத்தளம் பகுதியினரின் பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த இலங்கையின் பிரச்சினை

The post இலங்கை புத்தளம் : சிங்கப்பூரின் குப்பை மேடா ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IjSfEz
via Rinitha Tamil Breaking News

Sunday, February 17, 2019

இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !

ஹரியாணா பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்கள், தங்குமிடங்களிலேயே கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக பத்திரிகையாளர் ஃபகத் ஷா தெரிவிக்கிறார்.

The post இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SZpaT1
via Rinitha Tamil Breaking News

மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் !

மோடி வாக்களித்த வேலைவாய்ப்புகள் குறித்த கேள்விக்கு “வேலைகள் உருவாகியுள்ளன – ஆனால், அதை விளக்கும் புள்ளி விவரங்கள் தான் இல்லை” என வினோதமான ஒரு விளக்கத்தை முன்வைத்த்து நிதி ஆயோக்.

The post மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2NcoMeH
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ! பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது ! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !

ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். இது தூத்துக்குடி மக்களுக்கு தற்காலிக வெற்றி !

The post ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ! பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது ! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2X5ogUl
via Rinitha Tamil Breaking News

கோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு !

கோவில்பட்டியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்களை, நள்ளிரவு 1:30 மணிக்கு சுவரேறிக் குதித்து, கதவை உடைத்துச் சென்று சட்டவிரோதமாக நள்ளிரவில் கடத்திய போலீசு, காலையில் நைச்சியமாகப் பேசி மிரட்டியது

The post கோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2tqNr5X
via Rinitha Tamil Breaking News

கிட்னியை எடுத்துட்டு அனுப்புனாக் கூட கேக்க நாதியில்லை !

"கெட்ட கெட்ட வார்த்தைகளால திட்டி அடிக்க வந்தாரு. பொழைக்க வந்த இடத்துல சண்டையா போட முடியும். கொடுத்தத வாங்கிட்டு வந்துட்டேன்." - சென்னையின் ஒடிசா தொழிலாளிகள்.

The post கிட்னியை எடுத்துட்டு அனுப்புனாக் கூட கேக்க நாதியில்லை ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GObWlx
via Rinitha Tamil Breaking News

Saturday, February 16, 2019

பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊர் மக்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊரில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தி பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்தனர்.புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலர் வீரமரணம் அடைத்தனர் ,அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவாலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அவரும் வீரமரணம் அடைந்தார்.

சுப்பிரமணியன் கொல்லப்பட்ட காரணத்தால் அவரது கிராமத்தினர் கோபத்தில் உள்ளனர். இதனால் ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சுப்பிரமணியனின் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடியை எரித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.மேலும், தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது தார் உருவ பொம்மை எரித்து கோஷங்களை எழுப்பினர்.

The post பாகிஸ்தான் தேசிய கொடியை எரித்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியனின் ஊர் மக்கள் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2IrF4RQ
via Rinitha Tamil Breaking News

எதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் !

மக்கள் அதிகாரம் அமைப்பின் கார்ப்பரேட் காவி பாசிசம் - எதிர்த்து நில் மாநாட்டிற்கு போலீசு விதித்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு ! அனைவரும் வருக !

The post எதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2N7rxh2
via Rinitha Tamil Breaking News

Friday, February 15, 2019

எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் !

ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. மாநாட்டு நிதி தாரீர் !

The post எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2X7Ccx9
via Rinitha Tamil Breaking News

தேவை போர் அல்ல ! காதல் ! | காதலர் தின கேலிச்சித்திரங்கள்

முதலாளித்துவத்தின் எல்லைகளைக் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டது மனித குலத்தின் மீதான காதல்தான்..

The post தேவை போர் அல்ல ! காதல் ! | காதலர் தின கேலிச்சித்திரங்கள் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2TOY2mJ
via Rinitha Tamil Breaking News

சேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் !

மக்களின் பாதுகாவலர் போலத் தன்னை வெளிக்காட்டி கொள்ளும் சேலம் ஆட்சியர் ரோகிணி, உண்மையில் விஷம் கக்கும் பாம்பு என்பதுதான் நிதர்சனம்.

The post சேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2SU7Ui2
via Rinitha Tamil Breaking News

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 15/02/2019 | டவுண்லோடு

இன்றைய செய்தி அறிக்கையில் பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !, திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம், அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில்.

The post ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 15/02/2019 | டவுண்லோடு appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2IgIDKE
via Rinitha Tamil Breaking News

திராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் !

புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஒரு பகல் நேர பயண அனுபவம்...

The post திராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2X5u8ww
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்

காஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் உள்ள நபர் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர்கள் 2 பேர் வீர மரணம் அடைத்தனர்.அதில் ஒருவர் பெயர் சுப்ரமணியன் மற்றவரின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பயங்கர தாக்குதலில் மொத்தம் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . இந்த தாக்குதலில் தமிழக வீரர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்ரமணியன் வீரமரணம் அடைந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த செய்தி கேட்டு சுப்ரமணியனின் உறவினர்கள் , நண்பர்கள் மற்றும் பலர் கண்கலங்கியுள்ளனர்.சுப்ரமணி சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. சிஆர்பிஎப் மூலம் அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சுப்ரமணியனுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது . தாக்குதல் நடந்த அன்று மதியம் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. சுப்ரமணியனுடன் பலியான மற்றொரு தமிழக வீரர் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

The post காஷ்மீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2try0u9
via Rinitha Tamil Breaking News

Thursday, February 14, 2019

தொழிலாளி வர்க்க அரசியல் எது ?

நாம் அனுபவிக்கும் சமூகநலத் திட்டங்கள் எதுவும் எந்தக் கோவில் வழிபாட்டாலும் வந்தவையல்ல. அனைத்தும் போராட்டங்களின் ஊடாக வந்தவைதான்.

The post தொழிலாளி வர்க்க அரசியல் எது ? appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2N7Z4I5
via Rinitha Tamil Breaking News

நாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் !

இந்து தர்மம்தான் சனாதன தர்மம். சனாதன தர்மத்துக்காக நாங்க யார் தலையையும் சீவுவதற்கும், தேவைபட்டா எங்கத் தலைய கொடுக்குறதுக்கும் கூடத் தயாரா இருக்கோம்.

The post நாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2GH85qe
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்

பார்ப்பன இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், அடக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது.

The post நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம் appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2DDhCeW
via Rinitha Tamil Breaking News

காஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை தீவிரவாதி தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் 350 கிலோ வெடி மருந்து காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற பேருந்து மீது மோதினான். இதில் ரிசர்வ் போலீஸ் படையினர் 42 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர்.

ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ரிசர்வ் போலீஸ் படையின் 70 பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.பஸ் மீது வாகனத்தால் மோதப்பட்டதும், அருகே மிகப்பெரிய சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது .

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. அடில் அகமது என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர் . அடில் அகமது கடந்த வருடம்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீவிரவாத தாக்குதலுக்கு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் . இந்த சம்பவம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஜம்மு காஷ்மீர் உயர் காவல்துறை அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டதாக கூறப்படுகிறது . 20 வருடங்களில் காஷ்மீரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவே ஆகும் .

The post காஷ்மீரில் நடந்த பெரிய தீவிரவாத தாக்குதலில் 42 வீரர்கள் பலி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2SvYrhk
via Rinitha Tamil Breaking News

காதலர் தினம் : பொண்ணுங்களுக்காக யோசிக்கிறோம் இல்லேன்னா இந்துமுன்னணிய அடிச்சு விரட்டுவோம் ப்ரோ !

"வட இந்தியாவுல கல்வியறிவு இல்ல. அதனால பெற்றோர்கள் இவங்களுக்கு சப்போர்ட் பன்றாங்க. தமிழ்நாட்ல அது முடியாது. அதனால நான் தமிழை நேசிக்கிறேன்." காதலர் தின வில்லன்களான காவிகள் குறித்து இளைஞர்கள் பேசுகிறார்கள்.

The post காதலர் தினம் : பொண்ணுங்களுக்காக யோசிக்கிறோம் இல்லேன்னா இந்துமுன்னணிய அடிச்சு விரட்டுவோம் ப்ரோ ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2TJFzbg
via Rinitha Tamil Breaking News

பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் !

குறைந்தபட்சம் நான்கு பேர் இறந்ததையாவது அருண் ஜெட்லி ஒப்புக்கொண்டார். ஆனால், பிரதமர் மோடியின் அலுவலகம் அதையும்கூட விழுங்கிவிட்டது...

The post பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2BBgAjs
via Rinitha Tamil Breaking News

மோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி !

ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பான ஊடகங்களின் அழுத்தத்தால் சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனாலும் மோடியின் மோசடிகளை மூடி மறைக்க முடியாது திணறுகிறது காவி கும்பல்.

The post மோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி ! appeared first on வினவு.



from vinavu http://bit.ly/2UZS8Q1
via Rinitha Tamil Breaking News