Sunday, September 30, 2018

ஈரோடு நம்பியூரில் கனமழை : குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் 

கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள நம்பியூரில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள நம்பியூரில் நேற்று இரவு பெய்த கனமழையால் செட்டியம்பதி குளம் முற்றிலும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் பெரியார் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

வீடுகளை சுற்றிலும் 3 அடிக்கு மேல் நிற்கும் வெள்ள நீரால் 400க்கும் மேற்பட்டோர் சமுதாய நலக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் அப்பகுதியில் கடுமையான சுகாதாரக் கேடு நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Classic Right sidebar கனமழை, ஈரோடு, வெள்ளம், Rain, Erode, Flood தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Oovn8x
via Rinitha Tamil Breaking News

விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஆர்வம் - நடிகர் நானி

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 96. முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வருகிற அக்.,4ம் தேதி ரிலீசாக காத்திருக்கிறது.

இந்நிலையில், தெலுங்கு திரை உலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நானி. தற்போது விஜய் சேதுபதியின் ‘96’ படத்தை பார்த்ததும் அதனை தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிட நானி ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஏற்கெனவே நானியின் தெலுங்கு படங்கில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. அதேப்போல், நேரடியாக வெப்பம், நான் ஈ போன்ற தமிழ் படங்களில் நானி நடித்துள்ளார்.

Classic Right sidebar vijay sethupathy, Actor Nani, 96 Movie, Trisha சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OYHWob
via Rinitha Tamil Breaking News

காயத்தால் சீன டென்னிசில் இருந்து சிமோனா விலகல்

காயம் காரணமாக சீன ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாக சிமோனா ஹாலேப் தெரிவித்துள்ளார். 

சீன ஓபன் டென்னிஸ் தொடரானது தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலேப் விலகுவதாக தெரிவித்துள்ளார். வுஹான் டென்னிஸ் தொடரின் போது முதுகு வலி ஏற்பட்டதை தொடர்ந்து இந்த தொடரில் பங்கேற்கவில்லை என சிமோனா தெரிவித்துள்ளார். மேலும், சீன டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாகவும், நூறு சதவீகிதம் உடல் தகுதி இல்லாமல் தொடரில் பங்கேற்க விருப்பமில்லை எனவும் சிமோனா ஹாலேப் தெரிவித்துள்ளார்.

Classic Right sidebar விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xObFtk
via Rinitha Tamil Breaking News

குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் கடிதம் ஒன்றை அனுப்பி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளை பெற்று நாட்டு மக்களுக்கு சேவை புரிய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்

Classic Right sidebar குடியரசுத்தலைவர், ராம்நாத்கோவிந்த், எடப்பாடிபழனிசாமி, வாழ்த்து, பிறந்தநாள், edappadipalanisami, TNGovt, ramnathgovind தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QmEunx
via Rinitha Tamil Breaking News

மெரினாவில் சிவாஜிக்கு சிலை வைக்க கோரிக்கை வைத்தால் பரிசீலிக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்க கோரிக்கை வந்தால் அதனை தமிழக அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

இதேபோல், சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, சென்னை மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்கக்கோரி கோரிக்கை வந்தால், அதனை அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார். 
 

Classic Right sidebar மெரினா, சிவாஜி சிலை, Shivaji Statue, Marina அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OZkPtD
via Rinitha Tamil Breaking News

டெஸ்டில் கேப்டனாக அசாரூதின் சாதனையை முறியடிப்பாரா கோலி?

வெஸ்ட் இண்டீஸ் உடனான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி முன்னாள் கேப்டன் அசாரூதின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா வந்து 3 வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டி தொடரின் முதல் போட்டி வரும் 4-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, முகமது அசாரூதின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கேப்டனாக 539 ரன்கள் எடுத்திருந்தார். 

விராட் கோலி இதுவரை வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கேப்டனாக 502 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இந்த தொடரில் கோலி அசாரூதின் சாதனையை முறியடிப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கேப்டனாக கோலி, அதிக ரன்கள் எடுத்து தோனியின் சாதனையை தகர்த்தது குறிப்பிடத்தக்கது.

Classic Right sidebar வெஸ்ட்இண்டீஸ், இந்தியகேப்டன், கேப்டன், அசாரூதின், சாதனை, இண்டீஸ் விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NT6N0g
via Rinitha Tamil Breaking News

மாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா !

மோடி அரசின் அநீதிக்கெதிராக பகத்சிங் வழியில் மாணவர் சங்கமாக ஒன்றிணைவோம் ! சென்னை, விருதை, சிதம்பரம் பகுதிகளில் பகத்சிங் பிறந்த நாள் பிரச்சாரம் - செய்தி - படங்கள்.

The post மாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 112-வது பிறந்தநாள் விழா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NdSa2v
via Rinitha Tamil Breaking News

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: தீபிகா குமாரி வெண்கலம் வென்று அசத்தல் !

துருக்கியில் நடைபெற்ற உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

துருக்கியில் Samsun நகரில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதன் மகளிர் ரிசர்வ்  தனிநபர் பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் லிசா உன்ரு (Lisa Unruh) உடன் மோதினார். 5 செட்களின் முடிவில் இருவரும் 5க்கு5 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலை வகித்தனர். 

முடிவில், தீபிகா ஷூட் அவுட் முறையில் தீபிகா வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல், ஆடவர் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வெர்மா, தென்கொரிய வீரர் கிம் ஜாங்கோவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். கலப்பு அணி பிரிவில் அபிஷேக் வெர்மா, சுரேகா அடங்கிய இந்திய அணி துருக்கியை வீழ்த்தி வெள்ளிப்பதக்கம் வென்றது.

Classic Right sidebar துருக்கி, உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், தீபிகா குமாரி, வெண்கலப்பதக்கம், வில்வித்தை சாம்பியன்ஷிப் விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OYfGCd
via Rinitha Tamil Breaking News

குவைத் அதிகாரிகளின் பர்சை திருடிய பாகிஸ்தான் அதிகாரி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் சில நாட்களுக்கு முன்பு அந்நிய முதலீடு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் குவைத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் பர்சை காணவில்லை என புகார் கூறப்பட்டது. 

இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, பாகிஸ்தான் முதலீட்டுத்துறை செயலர் ஜரார் ஹைதர் கான் பர்சை திருடிய காட்சி சிக்கியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
 

Classic Right sidebar பாகிஸ்தான், அந்நியமுதலீடு, அதிகாரி, பர்சை, CCTV, Pakistan உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DHbQw4
via Rinitha Tamil Breaking News

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக முகநூலில் போலி வீடியோ - பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை

எகிப்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அமல் பாத்தி. இவர் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக முகநூலில் போலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் முடிவில், விளம்பரத்திற்காக அமல் பாத்தி போலியான வீடியோ வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமல் பாத்திக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

Classic Right sidebar பாலியல் வன்கொடுமை, வீடியோ, சிறை, சமூகசெயற்பாட்டாளர், அமல் பாத்தி, facebook, Video தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zHrO5j
via Rinitha Tamil Breaking News

சிவாஜி சிலையின் கீழ் கருணாநிதி பெயர் பொறிக்க ஏற்பாடு - நடிகர் பிரபு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணி மண்டபத்தில் நடிகர் பிரபு குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர் . அப்போது பேசிய அவர், சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரபு, சிலை நிறுவய கருணாநிதியின் பெயர் மீண்டும் சிலைக்கு கீழே பொறிக்கப்படும் என்றார். தமிழக அரசிடம் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக கண்ணடித்தவாறே பதிலளித்தார்.

Classic Right sidebar நடிகர்திலகம், சிவாஜி, கருணாநிதி, சென்னை, நடிகர்பிரபு சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Qk6kBa
via Rinitha Tamil Breaking News

ஐஎஸ்எல் கால்பந்து: வெற்றி பெற்ற அணிக்கு பெரும் பாராட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி தோல்வியடைந்தது. 

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் 2-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடன் மோதியது. இந்த போட்டி பெங்களூருவில் நடைபெற்றதால், உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெங்களூரு அணிக்கு இருந்தது. 

போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயன்றதில் 41-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிகு கோல் அடித்தார். பின், முடிவு வரை சென்னை அணி வீரர்கள் கோல் ஏதும் பதிவு செய்யவில்லை. 

முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் சொந்த மண்ணில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

Classic Right sidebar ஐ.எஸ்.எல், கால்பந்து, சென்னைஅணி, பெங்களூரு அணி, போட்டி விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xQgMtd
via Rinitha Tamil Breaking News

SBI ATM மூலம் பணம் எடுக்கும் அளவு குறைப்பு

ஏ.டி.எம் அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்கும் அளவை 20,000 ரூபாயாக எஸ்.பி.ஐ குறைத்துள்ளது.

ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் அளவை 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக குறைந்துள்ளது எஸ்.பி.ஐ. வங்கியின்  அறிவித்துள்ளது. ஏ.டி.எம். மூலம் பணம் திருடப்படுவதாக புகார்கள் வருவதை தடுக்கவும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் புதிய முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக எஸ்.பி.ஐ. நிர்வாகம் கூறியுள்ளது. இந்த நடைமுறை அக்.31ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

 

Classic Right sidebar SBI, ATM, Money Withdraw, எஸ் பி ஐ, ஏ டி எம்,   வணிகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DU7odJ
via Rinitha Tamil Breaking News

மோடியின் ‘துல்லியத் தாக்குதல்’ தினக் கண்காட்சி | கேலிச்சித்திரம்

தலித், இஸ்லாமியர் மீதான தாக்குதல், முற்போக்காளர்கள் படுகொலை, ஜி.எஸ்.டி. தாக்குதல், பணமதிப்பழிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு... மோடியின் துல்லியத் தாக்குதல்.

The post மோடியின் ‘துல்லியத் தாக்குதல்’ தினக் கண்காட்சி | கேலிச்சித்திரம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2DGCaq0
via Rinitha Tamil Breaking News

உ(அ)ச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

பெட்ரோல் விலை இன்று 25 காசுகளும், டீசல் விலை 32 காசுகளும் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் வரலாறு காணாத விலையேற்றத்தக் கண்டு வருகிறது. இந்தவிலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்றும் பெட்ரோல் விலையில் 25 காசுகளும், டீசல் விலையில் 32 காசுகளும் உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Classic பெட்ரோல், டீசல், Petrol Price, Diesel Price வணிகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RdOl0c
via Rinitha Tamil Breaking News

ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன ?

ஆந்திராவை நோக்கி கார்ப்பரேட்கள் : தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் பெருமளவு குறைய காரணம் என்ன? தினமலரின் ‘ஆராய்ச்சி’க்கு பதிலளிக்கிறது இக்கட்டுரை.

The post ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2xOpVSX
via Rinitha Tamil Breaking News

குன்றத்தூரில் திமுக பிரமுகர் ஓட, ஓட வெட்டிக் கொலை 

குன்றத்தூர் அருகே திமுக பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே சிறுகளத்தூர், காந்தி தெருவைச் சேர்ந்தவர் கிரிராஜன், இவர் திமுகவில் உறுப்பினராக உள்ளார். மனைவியின் தம்பிக்கு பாபு என்பவரது மகளை காதல் திருமணம் செய்து வைத்த விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

சமாதானமாக செல்லலாம் என கிரிராஜனை அழைத்த பாபு, தான் மறைந்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Classic Right sidebar திமுக பிரமுகர், வெட்டிக்கொலை, குன்றத்தூர், DMK Member, Murder தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Rcg4ym
via Rinitha Tamil Breaking News

நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி தகாத உறவை கைவிட மறுத்த கணவன்.. மனைவி தற்கொலை

தகாத உறவு குற்றமல்ல என நீதிமன்றமே உத்தரவிட்டதால் தகாத உறவை கைவிடமாட்டேன் என கணவர் சவால் விடுத்ததை அடுத்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை நெசப்பாக்கம், ராமதாஸ் தெருவைச் சேர்ந்த ஜான்பால் பிராங்ளின் என்பவர் அதே பகுதியில் உள்ள பூங்காவில் காவலராக வேலை பார்த்து வருகிறார், இவருக்கும் அங்கு துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பெண்ணுக்கும், தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அவரது மனைவி புஷ்பலதா கேட்டதற்கு, நீதிமன்றமே தகாத உறவு குற்றமல்ல என உத்தரவிட்டுள்ளதால், என்னை ஒன்றும் செய்ய முடியாது, நான் அந்த பெண்ணுடன் தான் வாழ்வேன் என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த புஷ்பலதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Classic Right sidebar தகாத உறவு, தற்கொலை, Illegal Affair, SupreCourt, Suicide தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NWtPDB
via Rinitha Tamil Breaking News

சென்னையில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. 

வங்கி ஜன்னலை கொள்ளையர்களை உடைத்தபோது, மும்பையில் உள்ள வங்கி கட்டுப்பாட்டு அறைக்கு அலாரம் ஒலித்துள்ளது. இதையடுத்து மும்பையில் இருந்து தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வங்கி ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, வங்கி ஜன்னல் கம்பிகள் கேஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Classic Right sidebar சென்னை, வங்கி, கொள்ளை முயற்சி, Chennai, Bank, Robbery தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zI60Xr
via Rinitha Tamil Breaking News

ஏழாம் தலைமுறை ES 300H சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்

லெக்சஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பில் சொகுசு கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் லெக்சஸ்(lexus) நிறுவனம், சொகுசுக்கார் தயாரிப்பில் மிகவும் புகழ்பெற்றது. ஏப்ரல் மாதம் சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஏழாம் தலைமுறை ES 300H சொகுசு கார், தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த கார் மற்ற கார்களை விட இட வசதி அதிகம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த காரில் 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்ட்மென்ட்(Infotainment) சிஸ்டம் உள்ளது. 

ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் 17 ஸ்பீக்கர்களை கொண்ட மார்க் லெவின்சன் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது. இந்த காரின் on road விலை, 70 லட்ச ரூபாய்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Classic Right sidebar ES 300H, சொகுசு கார், லெக்சஸ் நிறுவனம், Lexus, CAR தொழில்நுட்பம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y5dtO0
via Rinitha Tamil Breaking News

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்திலுள்ள 4 வது அலகில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது, இதன் மூலமாக ஆயிரத்து 440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக மத்திய அரசு மூலமாக நிலக்கரி வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழகத்திற்கான நிலக்கரி ஒதுக்கீட்டில் மத்திய அரசு போதிய அளவிற்கு நிலக்கரி ஒதுக்கப்படுவதில்லை. இதனால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில்,  210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

 

Classic Right sidebar மேட்டூர், அனல் மின்நிலையம் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OnJWti
via Rinitha Tamil Breaking News

மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழி நடத்துகின்றன - ராஜ்நாத் சிங்

ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய ரகசிய விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழி நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் விமர்சித்துள்ளார். 

அரியானா மாநிலம், அம்பாலா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழச்சி ஒன்றில் பேசிய அவர், ரஃபேல் ஒப்பந்தம் தற்போதைய மோடி ஆட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்டது அல்ல, என்றும் முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியின் நீட்சியே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது எனவும் கூறினார்.  

மேலும், ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய ரகசிய விவரங்களை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது சாத்தியமில்லாதது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

 

Classic Right sidebar ராஜ்நாத் சிங், Rajnath Singh அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P27Kjw
via Rinitha Tamil Breaking News

VVIP-களுக்கு வாடகை விமானம் : ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு 1146 கோடி ரூபாய் பாக்கி

விவிஐபிக்களுக்கு வாடகை விமானம் வழங்கியதில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு 1146 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ஒய்வு பெற்ற ராணுவ கமாண்டர் லோகேஷ் பத்ரா கேள்விக்கு ஏர் இந்தியா பதில் அளித்துள்ளது. அதில், குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட விவிஐபிக்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, ஏர் இந்தியா விமானங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

இதற்கான செலவு கட்டணத்தை மத்திய அரசு செலுத்தி விடுவது வழக்கமாகும். இந்த வழக்கமான நடவடிக்கையில் மத்திய அரசு, ஏர் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய வாடகை பாக்கி 1147 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Classic Right sidebar VVIP, வாடகை விமானம், ஏர் இந்தியா, மத்திய அரசு, Air India, central government இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y1v5uo
via Rinitha Tamil Breaking News

சரணாலயத்திற்கு படையெடுத்த கோடைக்கரை பறவைகள்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பாகவே பறவைகள் வரத்தொடங்கியுள்ளது சுற்றுலாப் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை வடதுருவப் பகுதிகளில் நிலவும் கடும் குளிரைப் போக்குவதற்காக இங்கு பறவைகள் வந்தவண்ணம் உள்ளன. கொசு உள்ளான் முதல் 4 அடி உயரமுள்ள பூநாரை வரை 270 க்கும் மேற்பட்டவகைப் பறவைகளை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மும்பையைச் சேர்ந்த பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தினர் கோடியக்கரையில் பறவைகளைப் பிடித்து இறகுகள் மற்றும் மூக்கின் நீளம், அதனுடைய எடை, உயரம் ஆகியவற்றை அளவிட்டு ஆய்வு செய்துவருகின்றனர்.

 

Classic Right sidebar நாகைப்பட்டினம், கோடையக்கரை, பறவை தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QlcyQZ
via Rinitha Tamil Breaking News

 பாகிஸ்தான் உளவுத்துறைக்கு புதிய தலைவர் யார்..?

நவீத் முக்தார் இன்று ஓய்வு பெற உள்ளதால் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு புதிய தலைவர் யார் என கேள்வி எழுந்துள்ளது. 

பாகிஸ்தானில் 2016-ம் ஆண்டு முதல்  உளவுத்துறையாக இருந்து வருபவர் லெஃப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார். இவர் இன்று ஓய்வு பெறுகிறார். இவர் 35 ஆண்டு காலம் ராணுவத்தில் சேவை ஆற்றி இருக்கிறார். 

தற்போது பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், உளவுத்துறையின் புதிய தலைவராக யார் வரப்போகிறார்கள் என்பது அங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நவீத் முக்தாருடன் இன்று 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பாதுகாப்பு படை அதிகாரிகள் 4 பேர் ஓய்வு பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Classic Right sidebar  பாகிஸ்தான், உளவுத்துறை, Pakistan, Intelligence, நவீத் முக்தார் உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RdZ4b1
via Rinitha Tamil Breaking News

பிரிட்டன் பொருளாதாரத்தை கடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - பிரதமர் மோடி சூளுரை

பிரிட்டன் பொருளாதாரத்தை கடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, எரி மற்றும் மின் சக்திக்கு குஜராத் தான் மையப்புள்ளி என்றும்  என்எல்ஜி-க்கு குஜராத் தான் நுழைவாயில் மற்றும் மைய இடம் எனவும் கூறினார்.  

இந்த 3வது என்எல்ஜி நாட்டிற்கு அற்பணிக்கப்படுகிறது என்றும் கிழக்கு கடற்பகுதிக்கு எரிவாயு அனுப்புவதற்கான முழு பொறுப்பை அனைவரும் ஏற்று அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

நாடு சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் இதுவரை 13 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்  இவற்றில் 10 கோடி இணைப்புகளை நாங்கள் ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் கொடுத்திருப்பதாகவும் மோடி கூறினார். மேலும், பிரிட்டன் பொருளாதாரத்தை முந்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Classic Right sidebar பிரிட்டன், பொருளாதாரம், பிரதமர் மோடி, Britain, Narendra modi, Economy இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Qnc1yi
via Rinitha Tamil Breaking News

பெட்ரோலை தொடர்ந்து உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை..! எவ்வளவு தெரியுமா..?

சமையல் கியாஸ் விலை இன்று முதல் 2 ரூபாய் 89 காசு காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது. இதே போன்று, அவ்வப்போது சமையல் கியாசின் விலையும் உயர்ந்து வருகிறது. 

அந்த வகையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை டெல்லியில் 59 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. மானியம் உள்ள சிலிண்டர் 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று இந்தியன் ஆயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. 

எனவே, கியாஸ் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை இந்த மாதத்தில் இருந்து 376 புள்ளி 60 ஆக உயர்த்தப்படுகிறது.

 

Classic Right sidebar சமையல் எரிவாயு, பெட்ரோல், Gas, Petrol, Indian Oil இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NfrKxr
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு நீதி கேட்டு லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம் 

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு நீதி கேட்டு லண்டனில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வேதாந்தா குழும அலுவலகத்தின் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். 

வேதாந்தா குழும அலுவலகத்தில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற இருப்பதையொட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 

Classic Right sidebar தூத்துக்குடி, துப்பாக்கி சூடுக்கு, லண்டன், ஆர்ப்பாட்டம், Thoothukudi, Sterlite Protest, Gun Shooting, Protest தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zGIWbe
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் : ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடுகிறது மத்திய அரசு

தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா ஆகிய 2 நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று  கையெழுத்திட உள்ளது.

இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

அதன் அடிப்படையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சிதம்பரமும், வேதாந்தா நிறுவனத்துக்கு வேறு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், டெல்லியில் இன்று கையெழுத்தாக உள்ளது.

Classic Right sidebar தமிழகம், ஹைட்ரோ கார்பன், மத்திய அரசு, central government, HydroCarbon, Tamilnadu, ONGC, Vedanta  தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IrMxwS
via Rinitha Tamil Breaking News

மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம் - ஸ்டாலின் கடும் விமர்சனம்

மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் ‘எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள் தான் தொடங்க வேண்டும் என மத்திய, மாநில அமைச்சர்கள் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆனால், இவை அனைத்தும் பொய் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

Classic Right sidebar மத்திய அரசு, மாநில அரசு. ஸ்டாலின், திமுக, அதிமுக, பாஜக, ADMK, DMK, Stalin, BJP, Palaniswami அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P1CAbZ
via Rinitha Tamil Breaking News

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - வாலிபருக்கு தர்ம அடி..!

புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்க்கும் தினேஷ் என்ற வாலிபர் அப்பகுதியை சேர்ந்த மனநலம் பாதித்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்ததையடுத்து தினேஷ்க்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பட்டப்பகலில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Classic Right sidebar புதுச்சேரி, பாலியல் தொந்தரவு, Puducherry, sexual harassment இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zHoHKU
via Rinitha Tamil Breaking News

25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்

நாகர்கோவிலில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 1973ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை, ஒன்றாக படித்த முன்னாள் மாணவர்கள்  38 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் பள்ளிகளில் சந்தித்த கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. 

அப்போது முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, தங்களுக்கு பாடம் கற்பித்து தந்த ஆசிரியர்களையும் அழைத்து மேடையில் அமரவைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தி கவுரவித்தனர். அப்போது ஒவ்வொருவம் தங்களின் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து, மகிழ்ச்சியைப்பரிமாறிக்கொண்டனர்.

இதேப்போன்று மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை கணிதவியல் துறையில், 90ஆம் ஆண்டுமுதல் 93ஆம் ஆண்டுவரை படித்த  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. 

இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதையடுத்து முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர், அக்கல்லூரியின்  4 மாணவர்களுக்கு புத்தகம் கல்வி உதவி மற்றும் கல்லூரி்  வளர்ச்சிக்கு நிதியுதவி அளித்தனர்.

 

Classic Right sidebar நாகரிகோவில்,  Nagarkovil தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xNkP9Q
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடியில் கப்பலில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி

தூத்துக்குடிக்கு வந்துள்ள பார்சி எனப்படும் சிறியவகை கப்பலை சுத்தப்படும் பணியின் போது விஷ வாயு தாக்கி 2 ஊழியர்கள் உயிரிழப்பு.

மாலத்தீவிலிருந்து இருந்து கற்களை ஏற்றிச் செல்வதற்காக பார்சி எனப்படும் சிறியவகை கப்பல் தூத்துக்குடி பழைய துறைமுகம் வந்துள்ளது. 

இந்த பார்சி கப்பலை வரும் 3 ஆம் தேதி ஆய்வுக்கு உட்படுத்த இருப்பதால் அதில் பணிபுரியும் ஊழியர்களைக் கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கும் போது பார்சியின் உள் அறைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் போது ஜாம்டேவிட் ராஜா, சக்திவேல் ஆகியோருக்கு விஷ வாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Classic Right sidebar தூத்துக்குடி, பார்சி, விஷ வாயு, Thoothukudi தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ouryz3
via Rinitha Tamil Breaking News

சர்வதேச நிறுவனங்கள் சென்னையில் தொழில் செய்ய விருப்பம் - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தனத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக தொண்டர்கள் என அனைவரும் பங்கேற்றனர். 

இந்த விழாவின் போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் சென்னையிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்கு மாதவரத்தில் 95 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து முனையம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் நடத்த முடிவு செய்து பல்வேறு துரித முன்னேற்பாடுகளை அரசு எடுத்து வருவதாக கூறிய அவர், பல சர்வதேச நிறுவனங்கள் சென்னையில் தொழில் செய்ய வருவார்கள்கள் எனவும் கூறினார்.

 

Classic Right sidebar எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா, பழனிசாமி, Palaniswami, MGR Centenary அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xQukoq
via Rinitha Tamil Breaking News

தீபாவளிக்கு வெளியாகிறதா ரஜினியின் '2.0' டிரெய்லர்..?

டீசரை தொடர்ந்து ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்ட 2.0 படக்குழு. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த படம் 'எந்திரன்'. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருந்த இந்த படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு எந்திரத்திற்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து உருவாகியிருந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது உருவாகி வருகிறது '2.0'. 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், 3 மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது  மட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது, படத்தின் டிரெய்லரை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ‘2.0’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். டீஸர் ஏற்படுத்திய அதிர்வலைகளே இன்னும் ஓயவில்லை அதற்குள் அடுத்த அப்டேட்டை சொல்லி கோலிவுட் ரசிகர்களை படக்குழு கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Classic Right sidebar 2POint0, Rajinikanth, ரஜினி,   சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NRCcA1
via Rinitha Tamil Breaking News

நீர்நிலைகளை ஆக்கிரமித்த கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க தடை?

குளம், ஏரி, சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில், புதிய மின் இணைப்பு வழங்குதல், மின் கட்டணம் நிர்ணயித்தல், மின்சாரம் கொள்முதல், கொள்முதலுக்கான கட்டணம் நிர்ணயித்தல், மின்உற்பத்திக்கான நிலக்கரி வாங்குதல் என அனைத்தும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியே நடந்து வருகிறது. 

மேலும் மின் இணைப்பு வழங்குவதற்கும் சில விதிமுறைகளை ஆணையம் வகுத்துள்ள நிலையில், தற்போது  மாவட்ட கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரிய தலைமை பொறியாளர் சுற்றறிக்கைஅனுப்பியுள்ளார். 

அதில் குளம், ஏரி, சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Classic Right sidebar  மின் இணைப்பு, மின் வாரியம், Electricity Connection, Electricity Board தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NTWdGa
via Rinitha Tamil Breaking News

சர்கார் படத்தின் 2-வது சிங்கிள் ட்ராக் வெளியீடு

சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்-ஐ சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

முருகதாஸ் - விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம், `சர்கார்'. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். 

வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சமீபத்தில் சிம்டாங்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது. 

இதையடுத்து, `ஒரு விரல் புரட்சி’ என்ற  இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடல் இன்று மாலை வெளியிடப்பட்டது. ஒரு விரல் புரட்சி என்ற பாடல் மூலம் வாக்குரிமை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த பாடல் அமையும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

Classic Right sidebar சர்கார், ட்ராக், Sarkar, Track, SarkarSecondSingle சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DEZO6A
via Rinitha Tamil Breaking News

U 19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய இந்திய அணி

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு எமீரகத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. 

வங்கதேசத்தில் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. 8அணிகள் பங்கேற்றுள்ள இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, 2வது போட்டியில் ஐக்கிய அரபு எமீரத்துடன் மோதியது. 

முதலில் ஆடிய இந்தியா, அனுஜ் ரவட், தேவ்டுட் படிக்கல் சதத்தால் 354 ரன்கள் குவித்தது. பின், விளையாடிய ஐக்கிய அரபு எமீரக வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட் இழந்து 127ரன்னுக்கு ஆல் அவுட் ஆகினர். முடிவில், 227ரன்களுக்கு அபார வெற்றி பெற்ற இந்தியா, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

 

Classic Right sidebar U18, Asian Cup, India Vs UAE விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DIQfTV
via Rinitha Tamil Breaking News

ATM-ல் பணம் எடுத்து தருவதாக பெண்ணிடம் மோசடி...

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏ.டி.எம் இயந்திரத்தில்  பணம் எடுத்து தருவதாகக் கூறி  பெண்ணிடம் 22,000 வரை பணம் மோசடி செய்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில்  கீழரத வீதி பகுதியில் உள்ள  இந்தியன் வங்கி  ஏ.டி.எம் இயந்திரத்தில் அதேப் பகுதியைச்  சேர்ந்த தேவி என்பவர் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது அந்த பெண்மணிக்கு உதவுவது போல், அப்பெண்மணி கேட்ட ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டு, அவரிடம் தான் வைத்திருந்த ஏ.டி.எம்  கார்டை மர்மநபர் மாற்றியுள்ளார். 

இதை அறியாத தேவி,  வீட்டிற்கு சென்று பார்த்த போது, தனது அலைபேசியில் 22,000 வரை பணம் எடுத்துள்ளதாக  குருஞ்செய்தி வந்துள்ளது. இதனை அடுத்து அந்த பெண் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  

பணம் எடுத்து தந்து உதவுவதுபோல், ஏடிஎம் கார்டை மாற்றி, நூதன பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Classic Right sidebar விருதுநகர்,  Virudhunagar தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P0yoce
via Rinitha Tamil Breaking News

சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த 5 வயது சிறுவன்

உசிலம்பட்டியில் சாலையில் தவறவிட்ட  10ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து,  5-வயது சிறுவன் போலீசாரிடம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம், பெரியபாலார்பட்டியைச் சேர்ந்த பரமன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் அருகே 10 ஆயிரம் ரூபாயை வைத்த பணப்பையை தவறவிட்டுள்ளார். 

அப்போது அவ்வழியாக சென்ற  5 வயது சிறுவன் அபிஷேக், அதை மீட்டு,தனது பெற்றோர் மூலம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கமுயற்சிஎடுத்துள்ளார். பின் உடனே தனதுமகன் அபிஷேக்குடன்,உசிலம்பட்டி நகர் காவல்நிலையத்துக்குச் சென்ற அபிஷேக்கின் தந்தை செல்வம், காவல்நிலையத்தில் பணப்பையை ஒப்படைத்தார். 

பின்னர், பணப்பையில் இருந்த தொலைபேசி எண்ணைவைத்து,நேரில் வரவழைக்கப்பட்டு பரமனிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவயதிலேயே நேர்மையுடன் செயலை, உசிலம்பட்டி காவல்நிலையத்தினர் வெகுவாக பாராட்டினார்.

 

Classic Right sidebar உசிலம்பட்டி, Usilampatti தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y4EBN1
via Rinitha Tamil Breaking News

MGR நூற்றாண்டு நிறைவு விழா : MGR சிறப்பு அஞ்சல் தலை, நிறைவு விழா மலர் வெளியீடு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில்,  எம்.ஜி.ஆரின் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா மலர் வெளியிடப்பட்டது.

சென்னை நந்தனத்தில் உள்ள ymca மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு  நிறைவு விழா கோலகலமாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், நாடாளுமன்ற மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். 

விழா மேடைக்கு வந்தவுடன், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். 

பின்னர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, எம்.ஜி.ஆரின் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நூற்றாண்டு விழா மலர் ஆகியவற்றை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுகொண்டார்.

 

Classic Right sidebar எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, அஞ்சல் தலை, MGR Centenary அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DGQmPP
via Rinitha Tamil Breaking News

ரன்வீர் ஷாவின் பழைய அரண்மையில் பொன்.மாணிக்கவேல் ஆய்வு 

தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பராமரிப்பில் உள்ள திருவையாறு பழைய அரண்மையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர் ஷாவின் வீட்டில் இருந்து 89 பழங்கால சிலைகள் மற்றும் தூண்களை கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில், தஞ்சையை அடுத்த திருவையாறில் ரன்வீர் ஷாவின் பராமரிப்பில் உள்ள பழமையான அரண்மனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை செய்தார். அரண்மனை காவலாளி கவிதாவிடம் வாக்குமூலம் பெற்று பின்பு ஐஜி பொன்மாணிக்கவேல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

 

Classic Right sidebar ரன்வீர் ஷா, பொன் மாணிக்கவேல், சோதனை, Pon Manikkavel, Ranvir Shah தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NQRt4r
via Rinitha Tamil Breaking News

கடலூருக்கு கடந்த முயன்ற 750 லிட்டர் சாராயம் பறிமுதல் 

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கடந்த முயன்ற 750 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பெரியகங்கனாங்குப்பத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்த போது, அரசி மூட்டை சாக்கில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

 

Classic Right sidebar புதுச்சேரி, சாராயம், கடத்தல், Puducherry தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ou80e9
via Rinitha Tamil Breaking News

இந்தோனேஷியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 832-ஆக உயர்வு

இந்தோனேஷியாவில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 832 ஐ தாண்டியுள்ளது. 

இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பல இடங்களில் சுனாமி ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 832 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

Classic Right sidebar இந்தோனேஷியா, நிலநடுக்கம், indonesia, Earth quake, death toll உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xXjHj0
via Rinitha Tamil Breaking News

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : பெங்களூரு-சென்னை மோதல்

5வது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடரை கேரள அணி வெற்றியுடன் தொடங்கிய நிலையில், இன்று நடைபெறவுள்ள 2வது லீக் போட்டியில் சென்னை அணி, பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 

இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டிவாரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை அணி தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ளது. அதேசமயம், சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் பெங்களூரு அணி வெற்றிக்கணக்கை தொடங்க காத்திருக்கிறது.

 

Classic Right sidebar ஐஎஸ்எல், கால்பந்து, பெங்களூரு, சென்னை, ISL, Foot ball, Bangalore, Chennai விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DQblA6
via Rinitha Tamil Breaking News

திருப்பூரில் பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

திருப்பூரில் பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பூரில் பல இடங்களில் கொள்ளை நடைபெறுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். 

இந்நிலையில், திருப்பூர் சிடிசி சாலையில் சந்தேகத்திற்க்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் 3 பேரும் மக்களின் கவனத்தை திசை திருப்பி கடந்த 8 மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

உடனடியாக 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 சவரன் நகை மற்றும் 1 லட்சத்தி 68 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

 

Classic Right sidebar Thiruppur, Theft, திருப்பூர், கொள்ளை தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xQ29pJ
via Rinitha Tamil Breaking News

இந்தியா வந்துள்ள உஸ்பெஸ்கிஸ்தான் அதிபருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள உஸ்பெஸ்கிஸ்தான் அதிபருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

உஸ்பெஸ்கிஸ்தான் அதிபர் சாவ்காட் மிர்யோவ்யோவ் அவரது மனைவியுடன் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் ஆக்ரா வந்தடைந்த அவரை, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்புடன், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  அப்போது மங்கையர்கள் ஆடிய பாரம்பரிய நடனத்தைக் கண்டுகளித்தார்.

Classic Right sidebar இந்தியா, உஸ்பெஸ்கிஸ்தான் அதிபர், சாவ்காட் மிர்யோவ்யோவ், India, Uzbekistan President  இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xJUx8c
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!

உள் தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதில் அதிகப்பட்ச வெப்ப நிலையாக 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்ப நிலையாக, 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இதேபோல் புதுவையிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பபுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Classic Right sidebar Rain, Tamilnadu, மழை, தமிழ்நாடு தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NSy5E8
via Rinitha Tamil Breaking News

பெரியார் சிலைகளை சேதப்படுத்துவது மதவெறி தலைக்கேறிய மூடர்களே - ஸ்டாலின்

பெரியார் சிலைகளை சேதப்படுத்துவது மதவெறி தலைக்கேறிய மூடர்களே என்று அறிக்கை வெளியிட்டுள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஹெச். ராஜா விதைத்த விஷ விதையின் நச்சு பரவிவருவதாக குற்றம்சாட்டியுள்ளார். 

பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கூடாது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சுயமரியாதை என்ற சமூக நீதியை வலியுறுத்துவதே திராவிட இயக்கம். 

சாதி - மத ஒடுக்குமுறை, ஆண் -பெண் பாலின பேதம் ஆகியவற்றை திராவிட இயக்கம் ஏற்பதில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், பெண்ணுரிமை, பெண் விடுதலை சொத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை பெண்களுக்கு வழங்கிய இயக்கம் தி.மு.க. என்று கூறியுள்ளார். 

எனவே, சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்ல உச்சநீதிமன்றம் அளித்த முற்போக்கான தீர்ப்பை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார். பெரியார் விதைத்த விதை, பேரறிஞர் அண்ணா வளர்த்த நாற்று, தலைவர் கலைஞர் காலமெல்லாம் பாதுகாத்து வளர்த்த மரம் - அதுதான் இன்றைக்கு இந்தியா முழுவதும் சமூக நீதியாக விழுது பரப்பி, ஒடுக்கப்படுகின்ற அனைவருக்கும் நிழல் கொடுப்பதாக பெருமிதம் தெரிவித்துளளார். 

அவரவர் நம்பிக்கை மற்றும் உரிமைகள் காக்கப்பட  வேண்டும் என்று போராடுவதே திராவிட இயக்கத்தின் நூறாண்டு கால வரலாறு என்று கூறியுள்ள ஸ்டாலின், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பாடுபடுவதாக கூறியுள்ளார். 

மதவெறியைத் தூண்டி, கலவர நெருப்பைப் பற்ற வைத்து, அமைதியைக் குலைத்து அதன் மூலம் தேர்தல் ஆதாயம் அடைய முடியுமா என நினைக்கின்ற அரசியல் சக்திகள் தமிழ்நாட்டில் புதிய வகை ஆபத்தான கலாச்சாரத்தை உருவாக்கி வருகின்றன என்றும்,  அனைத்து தமிழர்களாலும் மதம் - சாதி கடந்து போற்றப்படும் தலைவரான தந்தை பெரியாரின் சிலைகளைக் குறி வைத்துத் தாக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. 

மதவெறித்தனம் தலைக்கேறிய மூடர்கள் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்வதாக அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Classic Right sidebar  ஸ்டாலின், பெரியார், பெரியார் சிலை, Periyar Statue, Periyar, Stalin அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OZxn4q
via Rinitha Tamil Breaking News

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ஹெலிகாப்டர்

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தானின் ஹெலிகாப்டர் ஒன்று, அத்துமீறி நுழைந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் டாங்தார் பகுதியில் நடந்த தாக்குதலில் , 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

மேலும் பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலைக் கண்டித்து, நியூயார்க்கில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கண்டிப்பு தெரிவித்திருந்த நிலையில்  இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஹெலிகாப்டர் நுழைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே இந்திய ராணுவம் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Classic Right sidebar Pakistan, helicopter, Indian airspace, jammu, Kashmir, இந்தியா, பாகிஸ்தான், ஹெலிகாப்டர் இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zGnx2e
via Rinitha Tamil Breaking News

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் இந்தியா வந்து 3 வித கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் உடனான 2 டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு விராட் கோலி கேப்டனாகவும், ரஹானே துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 கோலி தலைமையில், கே.எல்.ராகுல், புஜாரா, ரிஷாப் பந்த், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், மொகமது சிராஜ், ஸ்ரதுல் தாகூர் ஆகியோர் உள்ளனர். மேலும்,ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஹனுமன் விஹார் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

Classic Right sidebar  சவுரவ் கங்குலி, ரோஹித் ஷர்மா, வெஸ்ட் இண்டீஸ், கிரிக்கெட், Sourav Ganguly, Rohit Sharma, West Indies. Cricket விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y1cZIJ
via Rinitha Tamil Breaking News

 2வது இடத்திற்கு முன்னேறிய ரோஹிட் ஷர்மா..

ஐசிசி ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

அண்மையில் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றிபெற்று 7வது முறையாக கோப்பையை வென்றது. இதற்கு பின் ஐசிசி வீரர்களின் புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. 

புதிய தரவரிசை படி ஆசிய தொடரில் 317 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா, 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு வீரரான ஷிகர் தவான் 4 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். 

இதேபோல், பந்துவீச்சாளர்களில் பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார். 6வது இடத்தில் உள்ள குல்தீப் யாதவ், 3 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

 

Classic Right sidebar ஐசிசி, ஒருநாள் தரவரிசைப், ரோஹித் ஷர்மா, ICC, Rohit Sharma, Ranking விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yaiiWD
via Rinitha Tamil Breaking News

கரடி தாக்கியதில் 4 வயது குழந்தை படுகாயம்

நாட்டறம்பள்ளி அருகே கரடி கடித்து 4 வயது குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் ஊராட்சி ஆந்திரா மற்றும் தமிழக எல்லை ஒட்டி வனப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து  தாய்  கரடி ஒன்றும் அதன்  குட்டி ஒன்றும் திடீரென்று ஊர் பகுதிக்கு வந்துள்ளது. 

இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்  கரடிகளை விரட்டும்  முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தாய் கரடி  அங்கிருந்து  தப்பி  அருகில் உள்ள வனப்பகுதிக்கு ஒடி விட்டது. 

இதனையடுத்து  குட்டிகரடியை விரட்டும் போது குமார் என்பவரின் மகள் கயல்விழி என்ற குழந்தையை கடித்தது. இதனால் படுகாயமடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Classic Right sidebar வேலூர், கரடி, Vellore, Bear தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RbbVLa
via Rinitha Tamil Breaking News