Tuesday, March 3, 2020

பாலியல் சுரண்டல் வழக்கில் சின்மயானந்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி :பாலியல் சுரண்டல் வழக்கில் சின்மயானந்திற்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஷாஜகான்பூர் சட்ட மாணவர் தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நவின் சின்ஹா ​​ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நவின் சின்ஹா ​​ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை .மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை சேதப்படுத்தவோ அல்லது சாட்சிகளை அச்சுறுத்தவோ மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த நீதிமன்றம் போதுமான நிபந்தனைகளை விதித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post பாலியல் சுரண்டல் வழக்கில் சின்மயானந்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2IeaGaP
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment