Saturday, March 28, 2020

ஆதரவற்ற பெண்ணுக்கு ரூ .4 லட்சம் செலுத்துமாறு இறந்த கணவரின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஒரு ஆதரவற்ற மற்றும் வீடற்ற பெண் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் கணவர் இறந்து விட்டதாகவும் , அவர் ஒரு விருந்தினர் மாளிகையில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இப்போது அவர் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது என்று தெரிவித்தார். எதிர்மனுதாரரின் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் அந்த பெண் ஒரு தொடர் மனுதாரர் என்று வாதிட்டார், இடைக்கால நிவாரணத்திற்காக பல அற்பமான விண்ணப்பங்களை தாக்கல் செய்து அனைத்து மன்றங்களிலும் தோற்றார் என்று தெரிவித்தார். இந்த மனு நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள், அந்த பெண்ணுக்கு ரூ. 4 லட்சம் நிதி உதவி வழங்க இறந்த கணவரின் குடும்பத்திற்கு உத்தரவிட்டனர்.

The post ஆதரவற்ற பெண்ணுக்கு ரூ .4 லட்சம் செலுத்துமாறு இறந்த கணவரின் குடும்பத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2wNl1Z4
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment