Monday, March 25, 2019

அழுத குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய தாய்

பிகார்:பிகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா பகுதியில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் குழந்தையின் தாய் கோபம் அடைந்துள்ளார் . குழந்தை அழுத காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் கோபமான அந்த தாய் குழந்தையின் இரு உதடுகளிலும் ஃபெவிகுயிக் பசையை ஓட்டியுள்ளார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய குழந்தையின் தந்தை,குழந்தை ஏன் அமைதியாகவே இருக்கிறது என்று அருகில் சென்ற போது குழந்தையின் வாயில் இருந்து நுரை வருவதை கண்டறிந்தார். இதுகுறித்த விசாரித்தபோது போது குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தை அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அழுத குழந்தையின் வாயில் ஃபெவிகுயிக் பசையை ஒட்டிய தாய் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Fx52zV
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment