Saturday, March 30, 2019

திருமண நாளன்று மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவர்

பெங்களூர்:கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவர் திருமண தகவல் அலுவலகம் மூலம் தனது பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. படித்து வேலை பார்த்து வந்த ரக்‌ஷா (26) என்ற பெண்ணை திருமணம் பேசி முடித்து, இருவருக்கும் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்‌ஷா வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. வாந்தி எடுத்ததை பார்த்து சந்தேகம் அடைந்த கணவர் ஆஸ்பத்திரியில் கன்னித்தன்மை பரிசோதனை செய்ய அழைத்து சென்றுள்ளார்.கணவர் டாக்டரிடம் ரகசியமாக பேசி மனைவிக்கு தெரியாமல் கன்னித்தன்மை பரிசோதனை செய்துள்ளார்.சந்தேகத்திற்கு காரணம் திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு தான் ரக்‌ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார்.திருமணம் பிடிக்காததால் தான் ரக்‌ஷா இப்படி இருப்பதாக சரத் தவராக கருதியுள்ளார்.அதுமட்டும் இல்லாமல் ரக்‌ஷாவின் உறவினர் ஒருவர் ஏராளமான உதவிகளை செய்ததால் அவர் மீது சந்தேகப்பட்டுள்ளார்.

ஆஸ்பத்திரியில் நடந்ததை அறிந்த ரக்‌ஷா உடனே தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.கணவர் நேரில் சென்று சமாதானம் செய்தும் எந்த பலனும் இல்லை.சரத் கர்நாடக அரசு குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் அளித்து இருவரையும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் அழைத்து பேசியும் ரக்‌ஷா மறுத்துவிட்டார்.சரத் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதற்கு பதிலடியாக ரக்‌ஷா போலீசில் சரத் மீது புகார் கொடுத்துள்ளார். தனது கற்பு மீது சந்தேகப்பட்டு சோதனை நடத்தியதால் என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது சமந்தமாக கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்துள்ளார்.

The post திருமண நாளன்று மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவர் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2U7nsjC
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment