Tuesday, May 7, 2019

முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை வழக்கு:விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சசிகலா புஷ்பா மற்றும் அவரின் முதல் கணவர் லிங்கேஸ்வர திலகன் மற்றும் மகன் ஆகியோர் மீது தூத்துக்குடியை சேர்ந்த பணிப்பெண் பாலியல் புகார்களை தெரிவித்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கோரி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.விசாரணைக்கு தடை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.ஆனால் அந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.மேலும் சசிகலா புஷ்பாவை பணிப்பெண்களின் வழக்கறிஞர் சுகந்தி வீட்டை தாக்கியதாக கூறிய வழக்கில் இருந்தும் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்திவிட்டது.சசிகலா புஷ்பாவை நீதிமன்ற விசாரணை முடியும் வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

The post முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை வழக்கு:விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2WvU04e
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment