Tuesday, April 9, 2019

வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்:விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார் . பிறகு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார் . விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடரப்பட்டது.லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி உத்தரவிட்டது.

உத்திரவை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த பிரிட்டன் உயர் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது பிரிட்டன் நீதிமன்றம்.

The post வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்:விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2WXyt4g
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment