Monday, April 8, 2019

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு: தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

டெல்லி:கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள மாங்காடு அருகே தஷ்வந்த் என்பவன் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து , பிறகு அந்த சிறுமியை எரித்துக் கொலை செய்தான். பிறகு கொலை செய்த தஷ்வந்த்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் தனது தாயை கொலை செய்துவிட்டு ,பிறகு மும்பை தப்பி சென்றான்.இதை அறிந்த காவல்துறை தனிப்படை அமைத்து 6-ம் தேதி மும்பையில் தஷ்வந்தை செய்தனர்.செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதித்திருந்தது.

தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது . கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்திருந்தது.உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு தூக்குத்தண்டனை என்பதால் மனுவை ஏற்று கொண்டோம் என்றனர் .அரசியல் சாசன பிரிவு 302-ன் படி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது சரியா என்று கேட்டு , தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.இந்த தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

The post சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு: தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2KjzDpi
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment