Wednesday, January 9, 2019

பொறாமையால் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்:பல்லடம் பகுதியைச் சேர்ந்த தம்பதி முத்துக்கிருஷ்ணன் – லாவண்யா. இருவருக்கும் ஒன்றரை வருடம் முன் கல்யாணம் ஆகியும் தம்பதிக்கு குழந்தை கிடையாது.

லாவண்யா முத்துகிருஷ்ணனை விட கொஞ்சம் அதிகம் படித்தவர் என்பதால் பொறாமை பிரச்சனையை இருந்து வந்தது. முத்துக்கிருஷ்ணன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் . இவர்களுக்குள் பொறாமை பிரச்சனையால் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு சண்டை நடந்துள்ளது. அக்கம்பக்கம் வீட்டில் உள்ளவர்கள் வழக்கம்போல் சண்டை என்று கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது .

நேற்று காலையில் அவர்களது வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவலை அறிந்து போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்த போது இருவரும் ஒரே புடவையை கழுத்தில் சுற்றியபடி தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தனர்.இருவரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இது கொலையா இல்லை தற்கொலையா என்று இனிமேல் தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது .

The post பொறாமையால் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2SHOTvK
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment