Saturday, December 29, 2018

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி…

விருதுநகர்: 4 நாட்களுக்கு முன் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் ராமநாதபுரத்தில் தற்கொலைக்கு முயன்றார். தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.

இந்த இளைஞர் தெரியாமல் செய்திருந்தாலும் குற்றஉணர்ச்சியால் தற்கொலைக்கு முயன்றார் என கூறப்படுகிறது . இந்த இளைஞர் வெளிநாடு செய்வதற்காக மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு தான் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது பற்றி தெரியவந்தது.

இதை அறிந்த அந்த இளைஞர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று அது எச்ஐவி பாதிப்பு உள்ள ரத்தம் என்றும் அதை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.இதை மீறியும் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதிக்கப்பட்டதை அறிந்து தற்கொலைக்கு முயன்றார் .

The post கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி… appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2Stibhu
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment