Monday, October 1, 2018

தாயார் சடலம் மீதேறி அமர்ந்து இறுதிச் சடங்கு செய்த அகோரி 

திருவெறும்பூர் அருகே அகோரி ஒருவர் இறந்த தனது தாய்க்கு விசித்திரமான முறையில் இறுதிச் சடங்கு செய்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று அவரது தாயார் மேரி வயது மூப்பால் காலமானார். இதையடுத்து இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட தாயாரின் உடல் மீதேறி அமர்ந்த அகோரி மணிகண்டன் மந்திரங்களை ஓதி பூஜை செய்தார். 

அவருடன் சக அகோரிகளும் மேளம் அடித்து, சங்கு முழங்க அகோரி பூஜை நடத்தி இறுதிச் சடங்கு செய்தனர். அகோரிகளின் இத்தகைய பூஜை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Classic Right sidebar திருச்சி, அகோரி பூஜை தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xZQBk3
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment