உத்தரபிரதேசத்தின் ஹரித்வாரில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக வந்த விவசாயிகளை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் விரட்டி அடித்தால் அந்த பகுதி பரபரப்பாக காட்சியளித்தது.
விவசாயக் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஹரித்வாரில் இருந்து டெல்லி நோக்கி பிரம்மாண்டப் பேரணி நடத்தி வருகின்றனர்.
ஹரித்வாரில் இருந்து ஏராளமான வாகனங்களில் புறப்பட்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி விரைந்தனர். அவர்களை உத்தரபிரதேசம் - டெல்லி எல்லையிலேயே போலீசார் ஆங்காங்கே தடுத்து வருகின்றனர்.
இதனால் வாகனங்களில் இருந்து இறங்கி பேரணியாக விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறினர். அவர்களை தடுப்புகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தனர் . ஆனால் தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி நோக்கி செல்ல முயற்சித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்கும் முயற்சியில் இறங்கினர்.
Classic Right sidebar உத்தரபிரதேசம், விவசாயிகள், Uttarpradesh, farmers மாநிலம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RhXfKa
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment