Tuesday, October 2, 2018

லைகா கூட்டணியில் இயக்குனர் மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, தியாகராஜன், ஜெயசுதா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இயக்குநர் மணிரத்னமின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. 

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், மணிரத்னமின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தையும் ‘லைகா’ நிறுவனத்துடன் சேர்ந்து மணிரத்னமே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளாராம். வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Classic Right sidebar லைகா, மணிரத்னம், LYCA, Manirathnam சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Rk33CV
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment