Tuesday, October 2, 2018

55 நாட்களுக்கு பிறகு திருமுருகன் காந்தி சிறையிலிருந்து விடுவிப்பு

பல்வேறு வழக்குகளில் கைதாகி,வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே- 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஐ.நா.சபையில் பேசியதற்காக,கடந்த ஆகஸ்ட் -9 ஆம் தேதி, மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன் காந்தி,  தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அதனால் உடல் நலம் குன்றியதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி  திருமுருகன் காந்தி, வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதற்கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின் கடந்த 29-ம்,தேதி வயிற்றுப்புண் மற்றும் ஜூரணக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.  

இந்நிலையில் திருமுருகன் காந்தி இன்று சிகிச்சை முடிந்து, வேலூர் சிறைக்கு திரும்பியபோது, சென்னை எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்களில் ஜாமின் கிடைத்திருந்தது. இதையடுத்து இன்று(02.10.18) மாலை 5 மணிக்கு திருமுருகன் காந்தி, விடுவிக்கப்பட்டார். அவருக்கு  மே 17 இயக்க  தொண்டர்கள்,  உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக திருமுருகன் காந்தி மீது 23 வழக்குகள் பதியப்பட்டிருந்தன

Classic Right sidebar மே 17, திருமுருகன் காந்தி, Thirumurugan Gandhi, May 17 தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NX47Po
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment