Monday, October 8, 2018

நக்கீரன் கோபாலை காண வந்த வைகோ கைது..!

நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், சிந்தாதிரிப்பேட்டை துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் அழைத்து வரப்பட்டார். அவரை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துணை ஆணையர் அலுவகம் வந்தார். 

ஆனால் அவரை காவல்துறையினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்ததாகவும், ஆனால் சர்வதிகாரிகள் போல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

காவல்துறையினர் அனுமதி மறுத்ததை அடுத்து, துணை ஆணையர் அலுவலகம் எதிரே வைகோ திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோவை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Classic Right sidebar நக்கீரன், கோபால், நக்கீரன் கோபால், வைகோ, vaiko, Nakkeeran Gopal அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IOEqe0
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment