Tuesday, October 2, 2018

மீண்டும் கைதாகும் கருணாஸ்.. காரணம் என்ன..?

கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவு நாள் அன்று தமிழ்நாடு தேவர் பேரவைக்கும், முக்குலத்தோர் புலிப்படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கருணாசை கைது செய்ய திருநெல்வேலி காவல்துறையினர் சென்னை வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவு நாள் அன்று முக்குலத்தோர் புலிப்படையினருக்கும், தமிழ்நாடு தேவர் பேரவைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கருணாசின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இது தொடர்பாக நெல்லையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கருணாசை கைது செய்ய இன்று சென்னை வந்த திருநெல்வேலி காவல்துறையினர், சாலி கிராமத்தில் உள்ள கருணாசின் வீட்டில் சென்று ஆய்வு செய்தனர். 

அங்கு கருணாஸ் இல்லாத காரணத்தால், வடபழனி காவல்நிலையத்தில் நெல்லை காவல்துறையினர் காத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Classic Right sidebar கருணாசை, Karunas அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P7x9Is
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment