கடந்த 2012 முதல் 2015ம் ஆண்டு வரை தமிழகத்தில் உள்ள சிறைகளில் 134 கைதிகள் மரணமடைந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சிறைகளில் மரணமடையும் கைதிகளின் உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2012 முதல் 2015ம் ஆண்டு வரை தமிழகத்தில் உள்ள சிறைகளில் 134 கைதிகள் மரணமடைந்துள்ளதாகவும், அவர்களில் 109 பேர் வயோதிகம் காரணமாகவும், 22 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார திட்டங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையையும் வரும் 8ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Classic Right sidebar தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P2KaCV
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment