Thursday, October 4, 2018

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா நிதானமான ஆட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 250ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, தொடக்கவீரர்களாக கே.எல்.ராகுலுடன், அறிமுக வீரர் ப்ரித்வி ஷா களமிறங்கினார்.

இதில், ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ப்ரித்வி ஷா, நிதானமாக விளையாடி சதம் கடந்தார். புஜாரா 86ரன்களிலும், ப்ரித்வி ஷா 134ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

தற்போது வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 250ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

Classic Right sidebar India, West Indies, வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணி, Cricket, Test Match விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DVln2P
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment