Monday, October 1, 2018

காதல் முதல் கொலை வரை.. சென்னையில் நடந்த கொடூரம்..

சென்னை அருகே உள்ள குன்றத்தூர் - சிறுகளத்தூர் கெலட்டிப்பேடை காந்தி தெருவை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் கிரிராஜன், தி.மு.க வார்டு உறுப்பினராக இருந்த இவருக்கு, சந்தியா என்ற மனைவியும்  ரியா, கண்மணி என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.  இந்த நிலையில் நேற்று மதியம் நந்தம்பாக்கம், கருமாரி அம்மன் நகர் அருகே கிரிராஜன் அரிவாளல் வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த கிரிராஜனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்களை வெளியாகின.  கிரிராஜன் மனைவியின், தம்பி அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகளை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அவர்களுக்கு கிரிராஜன் அடைக்கலம் கொடுத்து வைத்திருந்தார். இதையடுத்து பாபுவிடம் சென்று இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்து வைக்கலாம் என்று கிரிராஜன் சமரசம் பேசியுள்ளார். அதற்கு பாபு சம்மதிக்கவில்லை  என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று, கிரிராஜனின் மூத்த மச்சானுக்கு மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டில் இருந்து வந்துள்ளனர். அதற்கான வேலைகளை கிரிராஜன் கவனித்து வந்துள்ளார். 

இதற்கிடையே,  சமாதானமாக போகலாம் வா என்று கிரிராஜனை பாபு போனில் அழைத்துள்ளார். இதனை நம்பி கிரிராஜனும் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்த பாபு உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் , ஊருக்கு வெளியே, ஓட, ஓட விரட்டி கிரிராஜனை வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கிரிராஜன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தநிலையில், பாபு உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

Classic Right sidebar Chennai, Murder, Girirajan, கிரிராஜன் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P1VNKF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment