Monday, October 1, 2018

மதுபோதையில் நண்பனை, சக நண்பர்களே சேர்ந்து கிணற்றில் தள்ளி கொன்ற சம்பவம்..

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சப்பந்தி குப்பத்தை சேர்ந்தவர் மவின்குமார். பெங்களூரில் தச்சு வேலை செய்துவந்த இவர் அண்மையில் சொந்த ஊருக்கு வந்தார். ஊர் திரும்பிய அடுத்த நொடிகளில் இளைஞர்கள் என்ன செய்வார்கள். நண்பர்களை சந்திப்பது தான்... அவ்வாறு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் மது இருக்காமல் இருக்குமா என்ன? தென்னந்தோப்பில் மதுஅருந்தி விட்டு ஒரே ஜாலி தான்..

மவின்குமாருடன் சேர்ந்து 6 பேர் மது குடித்துள்ளனர். அனைவரும் போதை தலைக்கேரிய நிலையில், ஒருவருக்கொருவர் தள்ளிவிட்டு விளையாடினர். மவின்குமாரை, கிணற்றில் தூக்கி போடுவதற்காக தூக்கினர். இதை அவரது செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் மவின்குமாரை தூக்கி கிணற்றில் போட்டதுடன் அவர்களும் கிணற்றுக்குள் குதித்து குளித்தனர். மவின்குமார் தண்ணீரில் தத்தளித்தார். நீச்சல் தெரியாத அவர் கிணற்றுக்குள் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

மவின்குமார் உயிரிழந்ததை பார்த்து பதறிப்போன நண்பர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். எங்களது மகனை திட்டமிட்டு கொன்றதாக பெற்றோர் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

வெளியில் சென்ற மகன் வெகுநேரமாகியும் நீடு திரும்பாததால், பதறிபோன பெற்றோர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தேட ஆரம்பித்தனர். கிணற்றில் மகன் சடலமாக கிடப்பதை பார்த்தவுடன், இத்தனை ஆண்டுகளாய் பார்த்து பார்த்து செல்லமாய் வளர்த்த பெற்றோரின் கனவுகள் நொடிப்பொழுதில் தகர்ந்தது.

மகனை கொலை செய்ததாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ள பெற்றோர், இதில் காரணமான இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க வலியுறுத்தியுள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்களை சந்தித்தால் மது குடிப்பது இளைஞர்கள் வழக்கமாகவே வைத்துள்ளனர். அளவுக்கதிகமான போதை உயிரையே காவு வாங்கும் என்பதை இனியாவது அறிந்து செயல்படுவார்காளா இளைஞர்கள்.

Classic Right sidebar Murder, Drug, மவின்குமார் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zJHDZv
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment