Wednesday, October 3, 2018

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று தலைமைச் செயலகம் முற்றுகை..!

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

புதிய பென்ஷன் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேச ஜாக்டோ-ஜியோவை தமிழக அரசு அழைக்கவில்லை. இதனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஆசிரியர்களும் இன்று ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளனர். 

இதேபோல் ஊதிய உயர்வு, நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து இன்று தலைமைச் செயலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு என்பது அரசுப் பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று எச்சரித்துள்ள தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அனைத்து அலுவலக ஊழியர்கள் வருகை நிலை குறித்த அறிக்கையை அந்தந்த மாவட்ட அதிகாரிகள்  தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Classic Right sidebar Jacto Geo, Jacto Geo Protest, Bus Transportation, Secretariat தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zPcHXI
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment