Tuesday, October 9, 2018

தொடர்மழை காரணமாக பெயர்ந்து விழுந்த மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய லாரி ஓட்டுநர் 

குன்னூர் அருகே பரவலான கனமழை காரணமாக லாரி மீது மரம் ஒன்று விழுந்ததில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிரி தப்பினார். 

நீலகிரி மாவட்டம்  குன்னூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்நிலையில்,  உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லநள்ளி பகுதியில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. அந்த சமயத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து லாரி ஒன்று உதகையை நோக்கி சென்று கொண்டு இருந்தது. சாலையின் குறுக்கே விழுந்த மரம் லாரியின் பின்புறத்தில் விழுந்தது. இதனால், அதிர்ஷ்டவசமாக லாரி ஒட்டி வந்த ஓட்டுநர் நந்தகுமார் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்த விபத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Classic Right sidebar குன்னூர், கனமழை, மரம், Tree தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ILpFbF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment