எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே. பி நட்டாவை, அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார்.
டெல்லியில் உலக சுகாதாரத்துறை கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பன்னாட்டு மருத்துவக் கருத்தரங்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OI5qRN
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment