Wednesday, October 3, 2018

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவிற்கு இடைக்கால தடை...!

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தமிழக அரசு திரும்ப பெற்றதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளுக்காக தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருந்து, 342 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கியது. இந்த ஒப்பந்தம் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக மக்களிடம் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம்,  விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப பெற்றதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், ரத்து செய்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது.

Classic Right sidebar ஸ்டெர்லைட், தமிழக அரசு, sterlite தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P6TXbn
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment