Wednesday, October 3, 2018

புயல் அபாயத்தை தொடர்ந்து தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் புயல் சின்னம் உருவாகுவதால் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதனால்,  அக்டோபர் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல், லட்சத்தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அக்டோபர் 6 முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை எனவும் வானிலை ஆய்வு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆழ்கடலில் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்கள் அக்டோபர் 5ஆம் தேதிக்குள் கரை திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Classic Right sidebar தமிழகம், வானிலை, Tamilnadu, Weather Update தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RpsymH
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment