Wednesday, October 3, 2018

மணல் கடத்தலுக்கு அரசு அதிகாரிகள் துணை போனால் குண்டாஸ் சட்டம்: தமிழக அரசு அதிரடி

அரசு அதிகாரிகள் மணல் கடத்தலில் ஈடுபட துணைபுரிந்தால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மணல் கடத்தலுக்கு அரசு அதிகாரிகள் உதவுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில் அரசு அதிகாரிகள் மணல் கடத்தலில் ஈடுபட்டாலோ அல்லது உதவினாலோ குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் என மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக, மாநில அரசு வெளியிட்ட அரசாணையானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணல் கடத்தலில் தொடர்புடைய அதிகாரிகள், மற்றும் கடத்தல்காரர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.  இதுகுறித்தான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Classic Right sidebar மணல் கடத்தல், தமிழக அரசு தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zNYMRw
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment