Tuesday, October 2, 2018

ஆலய வழிபாடு தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் - வாகனங்கள் எரிப்பு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே  கோயில் வழிபாடு தொடர்பாக இருபிரினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன

அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் ஆயலத்தில், வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் நீடித்து வந்தது. இந்நிலையில், ஆலய வழிபாட்டுக்கு ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருக்கு அனுமதி மறுத்ததால், மோதல் கலவரமாக மாறியது. அப்போது, கற்கள் மற்றும் சோடாபாட்டில்களைக் கொண்டு ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். 

இதில், படுகாயமடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையிலான மோதலில், 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இருசக்கர வகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கலவரத்தையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Classic Right sidebar Virudhunagar, விருதுநகர் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Nlm9FA
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment