Wednesday, October 3, 2018

சென்னை ஆசிப் பிரியாணி கூடத்தை பூட்டி சீல் வைப்பு

சென்னை கிண்டியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிவந்த ஆசிஃப் பிரியாணி தயாரிப்பு கூடத்தை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆசிஃப் பிரியாணி தயாரிப்பு கூடத்தில் பிரியாணி தயாரிக்கப்பட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் அந்நிறுவனத்தின் கிளைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் உணவு சுகாதாரமற்ற விதத்தில் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உணவு மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். உணவு தயாரிக்கும் இடம் மற்றும் உணவு ஆகியவை சுகாதாரமற்ற விதத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா உத்தரவின் பேரில், பிரியாணி தயாரிப்பு கூடத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Classic Right sidebar ஆசிப் பிரியாணி, உணவு பாதுகாப்பு துறையினர், Aasif Briyani தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xV7Xyb
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment