தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் திருவாரூரில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும், காவிரி டெல்டா பகுதியில் 2 இடங்களில் வேதாந்தா நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமானதும், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமான காவிரி டெல்டா பகுதியைபாலைவனமாக்கி விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து,
திருவாரூர் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Classic Right sidebar திமுக, மத்திய அரசு, திருவாரூர், போராட்டம், DMK, Protest, central government, HydroCarbon அரசியல் 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Rkn9gv
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment