Wednesday, October 3, 2018

ஊட்டிக்கு சுற்றுலா சென்று மாயமான நண்பர்கள் சடலமாக மீட்பு

ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது மாயமான தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பேர், விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதில், 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராமராஜேஷ், ரவிசங்கர், இப்ராகிம், ஜெயக்குமார், அருண், அமர்நாத், ஜுட் ஆகிய 7 பேரும், கடந்த 30ம் தேதி சென்னையிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு, தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர்கள், கடந்த 1ம் தேதி வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். 2 நாட்களாகியும் மீண்டும் விடுதிக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், மாயமான 7 பேரையும் தேடி வந்த போலீசார், அவர்களது செல்போன் சிக்னலைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் கடைசியாக, அவர்களது செல்போன் சிக்னல் கல்லட்டி மலைப்பாதையின் 35-வது வளைவுடன் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, 7 பேர் சென்ற வாகனம், மலைப் பகுதியில் விபத்துக்குளானதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சம்பவப் பகுதிக்குச் சென்ற போலீசார், 2 பேரை உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில், 5 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Classic Right sidebar ஊட்டி, சுற்றுலா, Ooty தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IB7HIY
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment