Wednesday, October 3, 2018

ஆசியக்கோப்பை தோல்வி எதிரொலியாக கோலி இணையதளத்தை முடக்கிய வங்கதேச ஹேக்கர்கள்

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணியின் லிட்டன் தாஸ்க்கு தவறான முறையில் அவுட் வழங்கியதாக கூறி, கேப்டன் கோலியின் இணையதள பக்கத்தை வங்கதேச ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 7முறையாக கோப்பையை தட்டிச்சென்றது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இணையதள பக்கத்தை வங்கதேசத்தை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

அதில், லிட்டன் தாஸ்க்கு தவறான முறையில் அவுட் வழங்கியதாகவும், ’டியர் ஐசிசி, கிரிக்கெட் போட்டி ஜெண்டில்மேன்கள் விளையாட்டு இல்லையா?. தவறாக அவுட் வழங்கிய நடுவர் மீது நடவடிக்கை எடுத்து இந்த உலகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இதற்காக மன்னிப்பு கேட்கவில்லையென்றால் இணையதளப் பக்கங்கள் மீண்டும் முடக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Classic Right sidebar ஆசியக்கோப்பை, விராட் கோலி, வங்கதேசம், Virat Kolhi, Asia Cup, bangladesh விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yapbqS
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment