சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னையில் கடந்த சில தினங்களாக காலையில் வெப்பம் அதிகரித்து வந்தாலும், மாலை வேளைகளில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம் பகுதிகளில் அதிகாலை முதல் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் தியாகராய நகர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, சூளைமேடு, ராயப்பேட்டை, போரூர் மற்றும் கொளத்தூரிலும் கனமழை பெய்தது.
இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோவில், மல்லி வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.
தற்போது பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Classic Right sidebar சென்னை, இடி, கனமழை, வாகனஓட்டிகள், ChennaiRains, Rain, traffic, Chennai, tnrain தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RqCc8C
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment