Wednesday, October 3, 2018

சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு; 7 பேருக்கு உடலுறுப்பு தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏழு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் அஜய் சில்வெஸ்டர். இவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 4ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். கடந்த மாதம் 28 ஆம் தேதி காரைக்கால் பகுதியில் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் தலையில் படுகாயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கடந்த 30ம் தேதி அஜய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது பெற்றோர் அனுமதியுடன் அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் தானமாக பெறப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 7 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

Classic Right sidebar Karur, Road Accident, Puducherry, JIPMER Puducherry, உடலுறுப்பு தானம் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ODXvEQ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment