Monday, October 1, 2018

சென்னை கிண்டி அருகே தனியார் கார் ஷோரூமில் பயங்கர தீ விபத்து

சென்னை கிண்டி அருகே உள்ள கார் உதிரி பாகங்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. 

சென்னை கிண்டியில் தனியாருக்கு சொந்தமான கார் ஷோரூமில் உள்ள உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி சைதாப்பேட்டை, ராஜ்பவன் மற்றும் தேனாம்பேட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தண்ணீர் பற்றமால் அருகில் இருந்த தனியார் தண்ணீர் வண்டியை பயன்படுத்தி சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

Classic Right sidebar Chennai, Guindy, Car Spareparts Fire, சென்னை, கிண்டி, தீ விபத்து இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OYf3bD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment