மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக பிரதமரை சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக மதுரையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருபரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து பிரதமரை சந்திக்கவுள்ளதாக கூறினார்.
Classic Right sidebar எய்ம்ஸ், மதுரை, மருத்துவமனை, முதலமைச்சர், எடப்பாடிபழனிசாமி, எடப்பாடி, edappadipalanisami, edappadi, Tamilnadu, aims தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2O6OZyM
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment