Monday, October 8, 2018

இந்தியா, ஜப்பான் கடற்படைகளுக்கு இடையிலான போர்ப்பயிற்சி தொடக்கம்..!

இந்தியா மற்றும் ஜப்பான் கடற்படைகளுக்கு இடையிலான போர்ப்பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக ஜப்பானின் அதிநவீன போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர் மற்றும் ஏவுகணைகளை அழிக்கும் கப்பல்கள் உள்ளிட்டவை விசாகப்பட்டினத்திற்கு வந்துள்ளன. இந்த கூட்டுப் பயிற்சி JIMEX என்று அழைக்கப்படும். 

அந்த வகையில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் 18-வது போர்ப்பயிற்சி இதுவாகும். இந்தியாவை பொறுத்தவரையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 போர்க்கப்பல்களை இந்த பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது.

9 நாட்களுக்கு இந்த போர்ப்பயிற்சி நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 2013 டிசம்பரில் சென்னை அருகே இந்தியா – ஜப்பான் கடற்படையின் போர்ப் பயிற்சி நடைபெற்றது.

 

Classic Right sidebar இந்தியா, ஜப்பான், கடற்படை, India, japan, Navy இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2pHNNmX
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment