Monday, October 1, 2018

தமிழகத்தில் பா.ஜ.க படுதோல்வி அடையும் - திருநாவுக்கரசர்

நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு சென்னையில் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அவர், தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் படுதோல்வி அடையும் என்றும், 18 எம்எல்ஏக்கள் வழக்கு தமிழக அரசியலை மாற்றும் என்றும் கூறினார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Classic Right sidebar Thirunavukarasar, MK Stalin, DMK அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NUvDgg
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment