Monday, October 1, 2018

மலேசிய மணல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் ரூ.10.56 கோடி செலுத்தினார் சந்தீப் நந்தூரி

மலேசிய மணலுக்கான தொகையை தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி வரைவோலையாக செலுத்தியதால் அதனை விற்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுக பகுதிக்கு இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையை தமிழக அரசு கொடுக்கவில்லை என எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அக்டோபர் 1ஆம் தேதியான இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான சந்தீப் நந்தூரி மணலுக்கான தொகையான  10 கோடியே 56 லட்ச ரூபாயை வரைவோலையை செலுத்தினார்.

இதனையடுத்து, இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணலை விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Classic Right sidebar Malaysia Sand, மலேசியா, மணல் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DKej95
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment