இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விபத்தில் சிக்கி பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஒட்டிகள் அதிகம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2014 ஆண்டு, நாடு முழுவதும் 12 ஆயிரத்து 330 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். 5 ஆண்டுகள் இடைவெளியில் இந்த எண்ணிக்கை 66 விழுக்காடு அதிகரித்து, 2017 ஆண்டின் புள்ளி விவரப்படி 20 ஆயிரத்து 457 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 507 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் ஆயிரத்து 831 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிகையிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 6 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 5 ஆயிரத்து 699 பேரும், மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 659 பேரும் உயிரிழந்துள்ளனர்.
Classic Right sidebar மத்திய அரசு, இந்தியா, தமிழகம், இருசக்கர வாகன ஓட்டிகள், Tamil Nadu, Two Wheeler Accidents, India தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zJmY7w
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment