Monday, October 1, 2018

கார் விபத்தில் சிக்கிய வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் உயிரிழப்பு

கேரளாவில் கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கேரள மாநிலத்தை சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் பாலபாஸ்கர் தனது மனைவி மற்றும் தனது 2 வயது மகள் தேஜஸ் வினி பாலாவுடன், கடந்த மாதம் 28ஆம் தேதி காரில் திருச்சூர் சென்று விட்டு திரும்பினார். பள்ளிப்புரம் அருகே வந்த போது,  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில்,  2வயது மகள் தேஜஸ் வினி பாலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். படுகாயமடைந்த பாலபாஸ்கர், மனைவி, மற்றும் கார் டிரைவர் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில், பாலபாஸ்கர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Classic Right sidebar பாலபாஸ்கர், கேரளா, கார் விபத்து, Car Accident, Kerala, Balabhaskar இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IBfVAZ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment