Monday, October 1, 2018

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை - ரவுடி கும்பல் வெறிச்செயல்

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே பிரேம்குமார் என்பவரை ரவுடி கும்பல் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் செருக்கு பள்ளியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் ஒரு கொலை வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்பொழுது ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மதுபானக் கடைக்கு சென்று  வெளியே வந்த அவரை 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் நடுரோட்டில் விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளது. 

இச்சம்பவம் அங்குள்ள பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Classic Right sidebar ஆந்திரா, கொலை, வெட்டிக்கொலை, AndhraPradesh, Murder இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QiJTfm
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment