Tuesday, October 2, 2018

முடிவுக்கு வந்தது விவசாயிகளின் கிஷான் கிராந்தி பாதயாத்திரை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியை நோக்கி விவசாயிகள் நடத்திய கிஷான் கிராந்தி பாதயாத்திரை நள்ளிரவில் முடிவுக்கு வந்தது.

வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 15 மாநிலங்களைச் சேர்ந்ந விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். 

கடந்த மாதம் 23 ஆம் தேதி உத்தரகாண்டில்  தொடங்கிய ஊர்வலம் நேற்று உத்தரபிரதேசம் - டெல்லி மாநில எல்லையை வந்தடைந்தது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற இந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்த காவல்துறையினர் முயன்றனர். 

இதனால் வன்முறை மூண்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் ஊர்வலத்தை கலைக்க முயன்றனர். ஆனால் விவசாயிகள் விடாப்பிடியாக போராட்டத்தை தொடர்ந்தனர். இதனிடையே, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தி 7 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

 இதனையடுத்து நள்ளிரவில் டெல்லியில் உள்ள கிஷான் காட் பகுதிக்கு செல்ல விவசாயிகளை காவல்துறையினர் அனுமதித்தனர். பின்னர் அங்கு சென்று தங்களது ஊர்வலத்தை நிறைவு செய்த பிறகு, சொந்த ஊர்களுக்கு திரும்பினர். மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 

Classic Right sidebar கிஷான் கிராந்தி பாதயாத்திரை, டெல்லி, விவசாயிகள், போராட்டம், Delhi  Farmers இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xW5yDx
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment