டெல்லியில் இன்று நடைபெற உள்ள விழாவில் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் விருதை பிரதமர் மோடியிடம் அந்த சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரஸ் வழங்க உள்ளார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சி எடுத்தல், சூரிய ஒளிமின்சாரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றுக்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐக்கிய நாடுகள் சபை, மிக உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்(champions of the earth) எனப்படும் சுற்றுச்சூழல் விருதை அறிவித்துள்ளது.
ஐ.நா.சபையின் இந்த விருதை, டெல்லியில் இன்று நடைபெற உள்ள விழாவில் பிரதமர் மோடியிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரஸ் வழங்குகிறார். பிரதமர் மோடி தவிர, பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் உள்பட 5 பேருக்கும், ஒரு தனியார் அமைப்புக்கும் ஐ.நா. சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Classic Right sidebar பிரதமர் மோடி, சுற்றூச்சூழல் விருது, Narendra modi, United nations, The Earth Award இந்தியா 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zNaNXy
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment