Monday, October 1, 2018

மாணவ, மாணவிகளுடன் கிரிக்கெட் விளையாடி உற்சாகப்படுத்திய சச்சின்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், மும்பையில் உள்ள பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் கிரிக்கெட் விளையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக, மும்பையின் பண்ட்ரா நகரில் உள்ள பள்ளிக்கு சச்சின் சென்று மாணவ, மாணவிகளிடையே கல்வி மற்றும் தூய்மை குறித்து விளக்கினார்.

பின்னர், மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் சச்சின் ஈடுபட்டார். இறுதியாக, சச்சின் கிரிக்கெட் விளையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். அதன்பின், பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கையெழுத்திட்ட பேட்டை சச்சின் பரிசாக வழங்கினார்.

Classic Right sidebar Mumbai, sachin tendulkar, சச்சின் டெண்டுல்கர், மும்பை, SwachhataHiSeva, Swachh Bharat, தூய்மை இந்தியா இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y2SvQ2
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment