Monday, October 1, 2018

கடல் பிரச்சனையால் இருவர் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறை அருகே கடன் பிரச்சனையால் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காமராஜர் சாலையில் வசித்து வரும் சரவணன், சந்திரசேகரன் ஆகிய இருவரும் நீதிமன்றம் அருகே பைனான்ஸ் கடை வைத்து பார்ட்னராக தொழில் செய்து வந்துள்ளனர். இருவருக்கும் தொழில் ரீதியாக கடன் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சரவணன் மற்றும் சந்திர சேகரன் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

Classic Right sidebar தற்கொலை, மயிலாடுதுறை தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Re7zDf
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment