போட்டிக்கான டிக்கெட்டுகள் பங்கீடு செய்வதில் சிக்கல் - டிக்கெட் பிரச்சனை - இந்தியா - வெ.இண்டீஸ் போட்டி இந்தூரில் நடைபெறுவது சந்தேகம்
போட்டிக்கான டிக்கெட்டுகள் பங்கீடு செய்வதில் சிக்கல் எழுந்திருப்பதால், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான போட்டி இந்தூரில் நடைபெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 விதமான தொடர்களிலும் விளையாட உள்ளது. இதில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி வரும் அக்டோபர் 24-ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் இந்தோர் நகரில் நடைபெற உள்ளதாக அட்டவணை வெளியிடப்பட்டது. தற்போது மத்திய பிரதேச கிரிக்கெட் அமைப்பு தங்களுக்கு கிடைக்கும் இலவச டிக்கெட்கள் போதவில்லை என்றும், பிசிசிஐ விரைவில் பதில் வழங்காவிட்டால் போட்டி நடைபெறுவது சந்தேகம் என்றும் கூறியுள்ளது.
பிசிசிஐ விதிப்படி மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு 10 % டிக்கெட்டுக்கள் இலவசமாக வழங்கப்படும். அதிலும், பிசிசிஐ-க்கு கூடுதலாக டிக்கெட் வேண்டும் என்று கேட்டதால் இந்த சிக்கில் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
Classic Right sidebar விளையாட்டு 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2ReoB43
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment