உச்சநீதிமன்ற தீர்ப்பை பற்றி விமர்சிக்காமல், வழக்கம்போல 41 நாட்கள் விரதம் கடைபிடித்து ஐய்யப்பனை தரிசிக்க பயனிக்க வேண்டும் என்று சபரி யாத்திரை சன்மார்க்க சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் பல பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் கேரளாவில் மிகப்பெரிய பிரச்சனை வெடிக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து திருவிதாங்கூர் தேவசம் வாரியம் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் சபரி யாத்திரை சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பு சார்பில் சபரி மலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.
சபரி யாத்திரை சன்மார்க்க சங்கத்தின் தலைவர் என்.அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் செயலாக்க இயக்குனர் பிரேம்குமார்,சங்க நிர்வாகி சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக்கூட்டத்தில், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 41 நாட்கள் விரதம் கடைபிடித்து வழக்கம் போல பயணிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Classic Right sidebar சபரி யாத்திரை சன்மார்க்க சங்கம், சபரி மலை, அய்யப்பன், உச்சநீதிமன்றம், SupremeCourt, SabariMala தமிழகம் 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y6Obzb
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment