Monday, October 1, 2018

காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் வழக்கமாக உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது, நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

காந்தியின் 150வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக காந்தி நினைவிடத்தில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி மற்றும் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Classic Right sidebar மகாத்மா காந்தி, Mahatma Gandhi, Delhi, Raj Ghat, ராஜ்காட், டெல்லி, பிரதமர் மோடி, Narendra modi இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yfwwFJ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment