Monday, October 1, 2018

காலையில் ஆடு மேய்க்க சென்ற பெண், மாலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே  உள்ள  கூசாலிபட்டி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, ஆடு மேய்த்து வந்த இவர், நேற்று காலை வழக்கம் போல், இலுப்பையூரணி  கிராம கண்மாய் பகுதிக்கு 50 ஆட்டை  மேய்ச்சலுக்கு கொண்டுச் சென்றார். இந்தநிலையில், மாலையில் ஆடுகள் அனைத்தும் வீடு திரும்பிய நிலையில், பாக்கியலட்சுமி மட்டும் வரவில்லை . இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் நாளா , புறமும் தேடினர். 

அப்போது இலுப்பையூரணி - கூசாலிபட்டி இடையில் உள்ள கண்மாய் அருகே பாக்கியலட்சுமி, வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில், கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.  இதுகுறித்து  கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடி, டி.எஸ்.பி.  தர்மலிங்கம் தலைமையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். 

அங்கு சடலத்தை கைப்பற்றி உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், யார் கொலை செய்தார்கள் ...?  முன்விரோதமா ? அல்லது  வேறு ஏதேனும் காரணமா  என்பது குறித்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Classic Right sidebar பாக்கியலட்சுமி, Murder, Sucide தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P3gEx9
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment